தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் - முதல் பரிசு ரூ.15,000/- - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 6, 2024

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் - முதல் பரிசு ரூ.15,000/-

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது

10.01.2024 அன்று பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/-, இரண்டாம்பரிசு ரூ.7000/-, மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளன.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர். மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு தொடர் வண்டிக் கட்டணம் பயணப்படியாக வழங்கப்பெறும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000/- இரண்டாம் பரிசாகரூ. 12,000/- மூன்றாம் பரிசாகரூ.10,000/- வழங்கப்பெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.