கனமழை காரணமாக நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.20) விடுமுறை அறிவிப்பு!
*திருநெல்வேலி மாவட்டத்தில் நாளையும் (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (20.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது
- மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி
தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!
தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தென்காசிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடக்கும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.