10.3.2020 க்கு முன்னர் உயர்கல்வி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட ஆணை ரத்து - ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு.
ஆதிதிராவிடர் நலத்துறை -10.3.2020 க்கு முன்னர் உயர்கல்வி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட ஆணை-தற்போது இரத்து செய்து கடிதம் வெளியீடு.
பார்வையில் காணும் அரசு கடிதத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள் 10.03.2020-க்கு முன்னதாக உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற்று வழங்கப்படாத இடைநிலை / பட்டதாரி / உடற்கல்வி / கணினிபயிற்றுநர் / முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் உயர்கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கிட ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி ஆணையிடப்பட்டது.
பாரிவை 2-ல் காணும் ஆதிதிராவிட நல இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்குவதற்கு மாவட்ட ஆதிதிவிடர் நல அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. எனவே 10.03.2020-க்கு உயர்கல்வி பயின்றதற்கு முன் ஊக்க ஊதிய உயர்வு கோரி பெறப்படும் அணைத்து முன்மொழிவுகளும் ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் இயக்குநரின் ஆணை பெறப்பட்ட பின்னரே ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கப்படவேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.