நடமாடும் ஊர்தி மூலமாக உணவக தொழில் செய்திட விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு - 11.10.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 12, 2023

நடமாடும் ஊர்தி மூலமாக உணவக தொழில் செய்திட விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு - 11.10.2023

நடமாடும் ஊர்தி மூலமாக உணவக தொழில் செய்திட விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு - 11.10.2023

செய்தி வெளியிட்டு எண்:-194

செய்தி வெளியீடு - 11.10.2023


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோர்களின் பொருளதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் நடமாடும் ஊர்தி மூலமாக உணவக தொழில் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களின் பொருளாதர வளர்ச்சியினை மேம்படுத்த நடமாடும் ஊர்தியில் உணவக தொழில் தொடங்கும் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 வாபது முதல் 55 வயது வரை குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00.000 மிகாமல் இருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இத்தொழிலுக்கு திட்டத் தொகையாக ரூ.3.55,000/- வழங்கப்படும் இத்திட்டத் தொகையில் 30% மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கு திட்டத்தொகையில் 50% மானியம் வழங்கப்படும். எஞ்சிய தொகை வங்கி கடன் தொகையாக பெற வழிவகை செய்யப்படும் இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதன முகவரியில் புகைப்படம் மற்றும் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆய, அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:-

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், சென்னை மாவட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.