The Jungle Gang 2012 - October Month School Children's Movie - The Jungle Gang - Movie Summary & Dir Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 30, 2023

The Jungle Gang 2012 - October Month School Children's Movie - The Jungle Gang - Movie Summary & Dir Proceedings



அக்டோபர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

October Month School Children's Movie - The Jungle Gang - Movie Summary & Dir Proceedings

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006.

ந.க.எண். 34785 /எம்/மன்றம்/2023 நாள்: 30.10.2023

பொருள்:-

பள்ளிக்கல்வி கல்விசாரா மன்ற செயல்பாடுகள் சிறார் திரைப்படம் திரையிடுதல் மன்றம் 2023-24 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-9 வகுப்பு மாணவர்கள் கண்டுணர்தல் - அக்டோபர் மாதத்திற்கான திரைப்படம் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து. பார்வை:-

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்

ந.க.எண்.019528/எம்/இ1/2022 நாள் 19.05.2023. -

2022-2023 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணறும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2023-2024 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாசாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல் பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் நோக்கமாக அமைகிறது. மேலும், இத்திரைப்படங்களை கண்ணுறும் மாணவர்களின் விரிசிந்தனை மேம்படுதல் மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட பண்புகள் பெற இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது.

திரைப்படம் திரையிடுதல்

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படம் திரையிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் திரையிடப்படவுள்ள திரைப்படம் முன்கூட்டியே மாதத்தின் முதல் வாரத்தில் EMIS வழியே தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அக்டோபர் - 2023ஆம் மாதத்தில் 'தி ஜங்கிள் கேங்' என்கின்ற தமிழ் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

இத்திரைப்படம் பள்ளிகளில் திரையிடுதல் சார்ந்து பள்ளி தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.

வழிகாட்டும் நெறிமுறைகள்

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பிட்ட சிறார் திரைப்படங்கள் திரையிடலுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் இத்திரைப்படத்தினை திரையிடுதல் வேண்டும்.

திரைப்படம் திரையிடலுக்கான வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல் இணைப்பு-1ல்

- ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் திரையிடுதல் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

- பள்ளி சூழலுக்கேற்ப, மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பின் முன்கூட்டியே திட்டமிட்டு மாணவர்களை குழுக்களாக பிரித்து கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறுமின்றி திரையிடல் நிகழ்வினை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மாணவர்களும் திரைப்படத்தை காண்பதற்கு நல்ல காற்றோட்டத்துடன் போதுமான இடவசதி உள்ள அறையை தெரிவு செய்தல் வேண்டும்.

திரையிடுதலுக்கு முன் திரைப்படக்காட்டி மற்றும் ஒலிப்பெருக்கி சாதனங்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

குழந்தைகள் சிறந்த திரைப்பட அனுபவத்தை பெற ஏதுவாக வெளிப்புற ஒளி குறைவாக இருப்பதையும், போதுமான காற்று வசதியும் உள்ளதையும் உறுதி செய்திடல் வேண்டும்.

மின்சாதனங்கள் அதிக வெப்பமடையாது இருக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் மின் இணைப்புகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மின் சாதனங்களை மாணவர்கள் எளிதில் அணுக இயலாத வகையில் உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பு: EMIS வாயிலாக வழங்கபபடும் இத்திரைப்படம் மாணவர்களுக்காக பிரதியேகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

எனவே, EMIS தளத்தில் இருந்து மட்டுமே திரைப்படத்தினை திரையிடுதல்/பதிவிறக்கம் செய்தல் வேண்டும்.

பிற வலை தளங்களிலிருந்து இத்திரைப்படம் திரையிடுதல்/பதிவிறக்கம் செய்தல் கூடாது.

EMIS இணையவழியே தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியருக்கான உள்நுழைவு அடையாளங்களை பயன்படுத்தி திரைப்படத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து பென்-டிரைவ் அல்லது DVDல் சேமித்து வைத்து Hi-tech lab/ TV/Projector/Smart board வாயிலாக ஒலிபெருக்கி (Speaker) வசதியுடன் மாணவர்களுக்கு திரையிட வேண்டும்.

இவ்வசதி இல்லாத பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

திரைப்படம் திரையிடப்படுவதற்கு முந்தைய முதல் வாரத்தில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் EMIS செயலியில் உள்ள அத்திரைப்படத்தின் சுவரொட்டியை(Poster) A4 அளவு தாளிற்கு குறைவில்லாமல் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அறிந்திடும் வகையில் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.

திரையிடப்படவுள்ள திரைப்படத்தின் கதைச்சுருக்கம் முன்கூட்டியே வழங்கப்படும். திரைப்படம் திரையிடும் நாளுக்கு முன்னரே தலைமை ஆசிரியர்/ பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். திரையிடப்படுவதற்கு முன்னர் மாணவர்களை ஆர்வமூட்டும் வகையில் திரைப்படம் சார்ந்து சிறு முன் உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும்.

திரைப்படம் திரையிடப்பட்டு முடிந்த பிறகு, படத்தின் மையக்கருத்து/ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து உரையாடல் நடத்திட ஏதுவாக கலையில் ஆர்வமுள்ள துறைசார் வல்லுனரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம்.

திரையிடும்போது தொழில்நுட்ப காரணங்களால் இடையூறு ஏதேனும் ஏற்படின், திரையிடுதலை தற்காலிகமாக நிறுத்தி சரி செய்து மீள தொடங்கப்பட வேண்டும்.

திரையில் நிகழ்வினை ஆவணபடுத்தும் பொழுது மாணவர்களின் கவனத்தை சிதறடிக்காத வண்ணம் செயல்படல் வேண்டும். இணைப்பு-3ல் திரைப்படம் சார்ந்து மாணவர்களின் கருத்துகளை வழங்கப்பட்டுள்ள பின்னூட்டக் (feedback) கேள்வித்தாள் வாயிலாக பெறுதல் வேண்டும். திரைப்படம் மற்றும் அதன் கதைக்களம், மையக் கதாபாத்திரங்கள், துணை நடிகர்களின் கதாபாத்திரங்கள், ஒளிப்பதிவு, கதை நிகழ்வுகள், கதைப்போக்கு, முடிவின் தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மாணவர்களின் கவனத்தை அறிந்துணறும் வினாக்களை கேட்கலாம்.

(மாதிரி இணைப்பு-4ல் வழங்கப்பட்டுள்ளது)

ஒவ்வொரு மாதமும் சுமார் 5 மாணவர்களை ஆசிரியர் திரைப்படம் குறித்து 2-3 நிமிடங்கள் பேச செய்யவேண்டும். திரைப்படம் குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துக்களை சொந்த நடையில் எழுத செய்தல், படம் குறித்த விமர்சனம், பாத்திரம் குறித்த திறனாய்வு, படக்கதையின் சுருக்கம், படத்தில் தான் உணர்ந்தவற்றை விவரித்தல் போன்ற செயல்பாடுகள் அனைத்து மாணவர்களும் ஈடுபடுதலை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புகளையும் ஆவணப்படுத்துவதுடன் சிறந்த படைப்புகளை பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் இடம் பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி அளவில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவில் நடைபெரும் போட்டிகளிலும், ஒன்றிய அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை மாவட்ட அளவில் நடைபெறும் பொட்டிகளிலும் பங்கேற்க செய்தல் வேண்டும்.

மாவட்ட அளவில் வெற்றி பெரும் மாணவர்கள் ஆண்டு இறுதியில் நடைபெறும் சிறார் திரைப்பட திருவிழாவில் பங்கேற்பர். இந்நிகழ்வில் மாணவர்களோடு கலைத்துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துரையாட வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் மாணவர்கள் சிறந்த நேரடி அனுபவங்களை பெற வாய்ப்புகள் வழங்கப்படும். மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் பங்கேற்கும் மாணவர்களிலிருந்து சிறப்பாக செயல்படும் சுமார் 25 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். கண்காணித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல் ஒன்றிய அளவில்

வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடப்படுதலை உறுதி செய்து உரிய பார்வை விவரங்களை பள்ளிப்பார்வை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட அளவில்

மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள்(DPO), பள்ளி துணை ஆய்வாளர்கள் (DI), வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிறார் திரைப்படம் திரையிடப்படுதலை உறுதி செய்து பார்வையிட்டு பள்ளிப்பார்வை செயலியில் பதிவு செய்தல் வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் தகவல் மற்றும் ஆவண படுத்துதல் ஒருங்கிணைப்பாளர்(MDO), இந்நிகழ்வு சார்ந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவு செய்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாது பின்பற்றி ஒவ்வொரு மாதமும், மாநில திட்ட இயக்ககத்தால் பரிந்துரைக்கப்படும் திரைப்படத்தினை பள்ளிகளில் 6-9 ஆம் வகுப்பு திரையிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு :

1. திரைப்படத்திரையிடல்அமர்விற்கானநிகழ்ச்சிநிரல்

2. அக்டோபர் திரைப்படத்திற்குரிய சிறார் திரைப்படத்தின்சுருக்கம்

3. திரைப்படம் திரையிட்ட பின் உரையாட வேண்டியவை (Feedback)

4. மாணவர்களின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தை தூண்டும் வினாக்கள்

தி ஜங்கிள் கேங்

திரைபடத்தின் காலம் அளவு: 58 நிமிடங்கள் ஆண்டு 2012

மொழி: தமிழ்

'தி ஜங்கிள் கேங்'(The jungle Gang) திரைப்படத்தை World Wide Fund for Nature-India (WWF India) மற்றும் EARTH CARE இணைந்து தயாரித்துள்ளது. இதனை ஒளிப்பதிவு செய்து இயக்கியவர் இயக்குநர் கிருஷ்னேண்டு போஸ். இது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட முதல் இந்திய வனவிலங்கு திரைப்படத் தொடராகும். இந்தத் திரைப்படத் தொடரின் நோக்கம், இந்தியாவின் பல்வேறு வன விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்து விளக்குவதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் பங்கேற்க ஊக்குவிப்பதும் ஆகும்.

இத்திரைப்படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்களான பூரா (கருப்பு மான்), போ(வாத்து) மற்றும் குட்டு(தேவாங்கு) ஆகிய மூன்று நண்பர்களும் தங்கள் பயணத்தை இந்தியாவின் வடகிழக்கில் தொடங்கி மத்திய இந்தியாவின் வழியாக தெற்கே வந்தடைவதோடு காண்டாமிருகம், புலி, யானை மற்றும் கரடி போன்ற விலங்குகளின் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தங்கள் உரையாடலின் வழியே அவற்றின் வாழ்விடங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு பற்றி கதை சொல்கிறார்கள்.

ஒவ்வொரு தொடரின் இறுதியும் பூமியின் இயற்கை வளங்கள் அழிந்து வருவதை சுட்டிக்காட்டி குழந்தைகளும் மாணவர்களுமே அவைகளை பாதுகாக்க முடியும் எனும் நம்பிக்கையை விதைத்து ஊக்கமளிக்கிறது.

இத்திரைப்படங்கள் மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது. விருதுகள் :

1. சின் இந்தியா கிட்ஸ் திரைப்பட விழா, டெல்லி

2. 7-வது CMS வடவரன் திருவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது.

இணைப்பு 3: திரைப்படம் திரையிட்ட பின் உரையாட வேண்டியவை - கருத்து கேட்பு அமர்வு (feedback)

1. தங்களுக்கு இத்திரைப்படம் பிடித்திருக்கிறதா?

2. இத்திரைப்படத்தின் மையக் கருத்து என்ன?

3. கதை எதைப் பற்றியது அல்லது யாரைப் பற்றியது? அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?

4. கதையில் நிகழும் மிக முக்கியமான சம்பவங்கள் என்னென்ன?

5. தங்களை மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம் எது?

6. திரைப்படத்தின் வாயிலாக தாங்கள் கற்றுக்கொண்ட முக்கிய கருத்துகள் என்னென்ன?

7. இத்திரைப்படம் செய்கிறது?

எடுக்கப்பட்டுள்ள எடுக்கப்பட்டுள்ள நிகழ்விடம் படத்திற்கு நிகழ்விடம் படத்திற்கு எவ்வாறு சிறப்பு

8. இப்படத்தில் இசைக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது?

9. இத்திரைப்படத்தில், எந்த ஒரு கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் பின்னனிக்குரல் கொடுக்க விரும்புவீர்கள், அவ்வாறு விருப்பப்படின், ஒரு நிகழ்வில் அவர் விரும்பும் பாத்திரத்திற்கு பின்னனி குரல் கொடுக்க சொல்லலாம்.

10. இத்திரைப்படத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களுடன் உரையாடுவீர்களா, மற்றும் அவர்கள் இப்படத்தை காண சொல்வீர்களா? ஏன்?

11. இத்திரைப்படம் பற்றி உங்களின் எண்ணங்களை 2 வரிகளில் எழுதுக.

இணைப்பு - 4 மாணவர்களின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தை தூண்டும் வினாக்கள்

1. கதையின் தொடக்கத்தில், இடையில் மற்றும் முடிவில் என்ன நடக்கிறது?

2. இந்த கதை எந்த இடத்தில் நடக்கிறது?

3. இந்த கதை எங்கு நடக்கிறது என்று எப்படி அறிவது? 4. திரைப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனவா?

5. இக்கதை முக்கிய கதாபாத்திரத்தை தழுவி உள்ளதா அல்லது பிறரை சார்ந்து அமைகிறதா?

6. எந்த கதாப்பாத்திரத்திற்காவது குறிப்பிட்ட இசை அல்லது ஒலி கொடுக்கப்பட்டுள்ளதா?

7. எந்த ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்காவது குறிப்பிட்ட வண்ணம்/வண்ணங்கள் தொடர்புடையதாக உள்ளதா?

8. கதையின் தொடக்கத்தில் நாம் எங்கிருந்தோம் என்று நினைக்கிறீர்கள்?

9. இந்தக் கதை எப்போது நிகழ்கிறது எனக் கூற முடியுமா?

இந்த கதை கடந்த காலத்தை சார்ந்ததா அல்லது நிகழ்காலத்தைச் சார்ந்ததா என்பதை எப்படி அறிவீர்கள்?

10. இத்திரைப்டத்தின் முழு கருத்தையும் மூன்று நிமிடங்களில் உங்களால் நடித்துக் காட்ட முடியுமா? CLICK HERE TO DOWNLOAD Movie Summary & Dir Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.