தலைமையாசிரியர் கையேடு வெளியிடப்பட்டதன் நோக்கம் - பள்ளிக் கல்வித்துறை விளக்கம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 30, 2023

தலைமையாசிரியர் கையேடு வெளியிடப்பட்டதன் நோக்கம் - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்.



தலைமையாசிரியர் கையேடு வெளியிடப்பட்டதன் நோக்கம் - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்.

செய்திக்குறிப்பு :

தமிழக அரசின் சீரிய முயற்சியான அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை பண்பு பயிற்சிகள் இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது . இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் அனுபவ பகிர்வை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொகுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு கையேட்டினை தயாரிக்க ஆணையிட்டு இருந்தார்கள்.

இதன் அடிப்படையில் 40 - க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 291 பக்க அளவில் தலைமை ஆசிரியர் கையேடு பள்ளிக்கல்வி இயக்ககத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டில் தலைமை ஆசிரியர்கள் , உதவி தலைமை ஆசிரியர்கள் , வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களின் பணிகள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கமாக உள்ளது. மேலும் அலுவலக நடைமுறை பகுதியில் அலுவலகப் பணியாளர்களின் பணிகளும் , கடமைகளும் , பொறுப்புகளும் நிதி சார்ந்த நடைமுறை தகவல்களும் தரப்பட்டுள்ளன.

முதுகலை , பட்டதாரி , இடைநிலை மற்றும் சிறப்பு வழிகாட்டுதல்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது . மேலும் பள்ளிகளில் செஞ்சிலுவைச் சங்கம் , சாரணியர் இயக்கம் சுற்றுச்சூழல் மன்றம் , இலக்கிய மன்றம் , நூலக மன்றம் , வானவில் மன்றம் உள்ளிட்ட பல வகையான கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களும் ஆசிரியர்களுக்கான தரப்பட்டுள்ளன.

இக்கையேட்டினை இன்று 30.10.2023 அன்று மதுரையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டு தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள் . தலைமை ஆசிரியர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழும். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | தலைமையாசிரியர் கையேடு (உயர்நிலை / மேல்நிலை) 2023 - 2024 - 301 Pages - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.