10 ஆண்டுகள் பணி முடித்துள்ள பணியாளர்களுக்கு தேர்வுநிலை - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 26, 2023

10 ஆண்டுகள் பணி முடித்துள்ள பணியாளர்களுக்கு தேர்வுநிலை - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

The director of school education has ordered that the employees who have completed 10 years of service including both the post of cleaner and night watchman who are working in government high / secondary schools can be given selective status! - அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவாளர் - இரவுக் காவலர் பதவி இரண்டையும் சேர்த்து 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள பணியாளர்களுக்கு தேர்வுநிலை வழங்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பார்வை 1-ல் காணும் அரசுக் கடிதத்தில் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அடிப்படைப் பணியாளர்களான துப்புரவாளர்/இரவுக் காவலர் இரண்டையும் சேர்த்து 10 ஆண்டுகள் பணி முடித்துள்ளவர்ளுக்கு தேர்வுநிலை வழங்குவதற்கு தெளிவுரை கோரப்பட்டுள்ளது.

அதன்படி துப்புரவாளர். இரவுக் காவலர்களுக்கு தேர்வுநிலை வழங்குவது சார்ந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசாணைகள் மற்றும் அரசு விதிகளின்படி தேர்வுநிலை வழங்குமாறும், இது சார்ந்து இவ்வியக்ககத்திற்கு அடிக்கடி தெளிவுரைகள் கேட்டு கடிதங்கள் அனுப்புவதை தவிர்க்குமாறும், மேலும் இப்பொருள் சார்ந்து காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் காலதாமதம் ஏற்படின் சார்ந்த அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.