அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியும் . - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 25, 2023

அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியும் .



அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியும் . - ஆ. மிகாவேல் ஆசிரியர் மணப்பாறை

* பணி சார்ந்த வழக்குகளில் சாதமான , சாதகமற்றவைகள் மிகவும் அவசியம் .

* சுரேஷ் வழக்கின் இரு நபர் அமர்வு தீர்ப்பின் படி ஒருவர் ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு TNPSC உட்பட வேறு தேர்வு முகமை புதிய நியமனம் பெறும் போது ஊதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .

* ராஜேஸ்வரி வழக்கின் இரு நபர் அமர்வு தீர்ப்பு , உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஒருவர் ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு TNPSC உட்பட வேறு தேர்வு முகமை புதிய நியமனம் பெறும் போது ஊதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .
* ரூபஸ் டேவிட் வழக்கின் உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறை ஆணை பிறப்பித்துள்ளார்கள்

* சுதா வழக்கின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்கள் .

* மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கிய சுற்றறிக்கையில் Technical resignation மூலம் ஒரு பணியிலிருந்து வேறு Uணிக்கு நியமனம் பெறும் போது , ஊழியர்களின் உழைப்பை அங்கிகரிக்கும் விதமாக ஊதிய பாதுகாப்பு வழங்குமாறும் , ஊதியப் பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு பெருமை கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஆ. மிகாவேல் ஆசிரியர்
மணப்பாறை
9047191706

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.