தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் துணை பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் நிரப்பிட வேண்டி பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை!
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு - 17-08-23
பெறுநர்
பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள், பள்ளிக்கல்வி இயக்குநரகம் . - சென்னை 6
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வால் ஏற்படும் காலி இடங்களுக்கு முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் துணை பொது மாறுதல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர் -முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, 1-8-2023 அடிப்படையில் கூடுதல் பணியிடங்களைக்காட்டி பட்டதாரி ஆசிரியர் துணை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை
பொருள்:
மேல்நிலைக்கல்வி- தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் துணை பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் நிரப்பிட வேண்டுதல் - சார்பு.
வணக்கம்.
தற்போது மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிகளுக்கு, பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கலந்தாய்வு நடைபெற்றபின் உருவாகும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும், முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கும் உடனடியாக துணை பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்திட ஆவன செய்ய வேண்டும். அப்போதுதான் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி பாதிப்படையாமல் இருக்கும். மேலும் பதவி உயர்விற்கு பின் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும், 01.08.2023 அன்றைய தேதியில் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்துவது வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்குப் பணிமாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல்வாய்ப்பாகவும் இருக்கும். ஆகவே பதவி உயர்வு கலந்தாய்வு நிறைவு பெற்றவுடன் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு துணை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட ஆவன செய்ய வேண்டும் என அன்புடன் கோருகிறோம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.