Rotary Club of Dindigul KING TOWN சார்பில் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் சார்ந்து கடிதம்...
பெறுநர்
தேதி: 11.08.2023
உயர்திரு. முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் முதன்மைக்கல்வி அலுவலகம்.
திண்டுக்கல்
அன்புடையீர் வணக்கம்,
Rotary Club of Dindigul King Town சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செப்டம்பர் மாதம் 5 - ஆம் தேதி அன்று ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கி சிறப்பு செய்து வருகிறோம். இவ்வாண்டும் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர் தின விழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இதற்காக தங்களின் ஆளுகைக்கு கீழ் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகை ஆசிரியர்களிடம் தகவல் அளித்து விண்ணப்பம் அனுப்ப தக்க ஏற்பாடுகள் செய்து உதவ அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஒரு வட்டாரத்திற்கு இரண்டு முதல் மூன்று ஆசிரியர்களுக்கு இவ் விருது வழங்க திட்டமிட்டுள்ளோம்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்து வேண்டும்.
கல்விப்பணியுடன்சமூகப்பணியிலும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
★ புகைப்படங்கள் சான்றிதழ்கள் உள்ளிட்ட தெளிவான விபரங்கள் விண்ணப்பத்தில் இடம் பெற்று இருக்க வேண்டும். * வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பம் உள்ளிட்ட சுய குறிப்பு விபரங்கள் திண்டுக்கல் RM காலணியில் அமைந்துள்ள எங்களது அலுவலகம். திண்டுக்கல் 108 விநாயகர் கோவில் எதிரில் உள்ள Frontline Computers ஆகிய இடங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும்.
நகல்
1. மாவட்ட கல்வி அலுவலர்கள் திண்டுக்கல்,பழனி.
2.அனைத்து வட்டாரகல்வி அலுவலர்கள் திண்டுக்கல் மாவட்டம்.
3.அனைத்து வகை ஆசிரியர் சங்கங்கள் திண்டுக்கல் மாவட்டம்.
பெறுநர்
தேதி: 11.08.2023
உயர்திரு. முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் முதன்மைக்கல்வி அலுவலகம்.
திண்டுக்கல்
அன்புடையீர் வணக்கம்,
Rotary Club of Dindigul King Town சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செப்டம்பர் மாதம் 5 - ஆம் தேதி அன்று ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கி சிறப்பு செய்து வருகிறோம். இவ்வாண்டும் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர் தின விழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இதற்காக தங்களின் ஆளுகைக்கு கீழ் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகை ஆசிரியர்களிடம் தகவல் அளித்து விண்ணப்பம் அனுப்ப தக்க ஏற்பாடுகள் செய்து உதவ அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். ஒரு வட்டாரத்திற்கு இரண்டு முதல் மூன்று ஆசிரியர்களுக்கு இவ் விருது வழங்க திட்டமிட்டுள்ளோம்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்து வேண்டும்.
கல்விப்பணியுடன்சமூகப்பணியிலும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
★ புகைப்படங்கள் சான்றிதழ்கள் உள்ளிட்ட தெளிவான விபரங்கள் விண்ணப்பத்தில் இடம் பெற்று இருக்க வேண்டும். * வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பம் உள்ளிட்ட சுய குறிப்பு விபரங்கள் திண்டுக்கல் RM காலணியில் அமைந்துள்ள எங்களது அலுவலகம். திண்டுக்கல் 108 விநாயகர் கோவில் எதிரில் உள்ள Frontline Computers ஆகிய இடங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும்.
நகல்
1. மாவட்ட கல்வி அலுவலர்கள் திண்டுக்கல்,பழனி.
2.அனைத்து வட்டாரகல்வி அலுவலர்கள் திண்டுக்கல் மாவட்டம்.
3.அனைத்து வகை ஆசிரியர் சங்கங்கள் திண்டுக்கல் மாவட்டம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.