எழுத்துப் பிழையுடன் பேனர் அடித்த கல்வித்துறை: கடைசி வரை கண்டுபிடிக்காமல் நடந்த அரசு விழா! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 3, 2023

எழுத்துப் பிழையுடன் பேனர் அடித்த கல்வித்துறை: கடைசி வரை கண்டுபிடிக்காமல் நடந்த அரசு விழா!

எழுத்துப் பிழையுடன் பேனர் அடித்த கல்வித்துறை:

கடைசி வரை கண்டுபிடிக்காமல் நடந்த அரசு விழா!


சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் மேடையில் வைத்துள்ள பேனரில் பள்ளி கல்வித்துறை என்பதற்கு பதிலாக பள்ளி கல்லித்துறை என எழுத்து பிழையுடன் பேனர் வைத்திருந்தனர்.

இது தமிழன்னைக்கே பொறுக்காது என தமிழறிஞர்கள் கொதிக்கின்றனர்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு பங்கேற்று பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.

விழா மேடையில் வைத்துள்ள பேனரில் பள்ளி கல்வித்துறை என்பதற்கு பதிலாக பள்ளி கல்லித்துறை என எழுத்து பிழையுடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.