சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்குவது குறித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 22, 2023

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்குவது குறித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்குவது குறித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு


சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்குவது குறித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு கோயம்புத்தூர் பொள்ளாச்சி இந்தியாவில் சார்பில் நிலவிற்கு சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த விண்கலம் இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலாவில் தரை இறங்குவதாக இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

இந்த நேரத்தை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குழந்தைகள் நேரத்தை குறிக்கும் வகையில் தரையில் அமர்ந்து இருந்தனர்.

மேலும் சந்திரயான்-3 தரையிறங்கும் தருணங்களை தொலைக்காட்சி வழியாக பார்த்து மகிழவும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.