பழைய ஓய்வூதியம் கோரி டெல்லியில் பேரணி: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சார்பில் ஆக.10-ல் நடக்கிறது
சென்னை: பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி டெல்லியில் வரும் ஆக.10-ம் தேதி நடத்தப்படுகிறது.
தற்போது நடைமுறைபடுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வரும் ஆக.10-ம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட உள்ளது.
இதில், நாடு முழுவதும் இருந்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், துணை ராணுவ படையினர், ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இப்பேரணியில் தமிழகத்தை சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.