10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்குதல் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 16, 2023

10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்குதல் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Order of the Joint Director of School Education seeking details regarding the permanentization of temporary posts which have been granted extension orders for more than 10 years. - 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்குதல் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!

பார்வை (1)ல் குறிப்பிட்டுள்ள அரசாணையின்படி 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று செயல்பட்டு வரும் தற்காலிகப் பணியிடங்கள் தொடர்உதின் அவசியத்தை ஆராயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நிரந்தர / தற்காலிகப் பணியிடங்கள் குறித்து கீழ்க்காணும் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு பார்வை (2)ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பார்வை (2)ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு வரிசை எண் 1 முதல் 9 முடிய உள்ள விவரங்களின் அடிப்படையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் மருதம் எழுத்துருவில் தட்டச்சு செய்து 18 .05.2023க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து தெரிவிக்கப்படுகிறது. மேற்படி விவரங்கள் அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால், இதில் தனிக்கவனம் செலுத்தி உரிய காலக்கெடுவிற்குள் விவரங்களைப் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.