மாற்றுச் சான்றிதழ் யார் எழுதவேண்டும் பற்றிய CM cell தகவல்
Grievance -
நான் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 12 ம் வகுப்பு முடித்து செல்லும்போது, அவர்களுக்கு வழங்க வேண்டிய மாற்று சான்றிதழ்கள் ஆசிரியரல்லா அலுவலக பணியாளர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டும். ஆனால் விதிகளுக்கு முரணாக முதுகலை ஆசிரியர்களை மாற்று சான்றிதழ் எழுத்துவதற்கு, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். எனவே இது சார்ந்து பள்ளிக்கவ்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாற்றுசான்றிதல்கள் ஆசியர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா? அல்லது அலுவலகப் பணியாளர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா என்ற தெளிவுரை வழங்குமாறு | கேட்டுக் கொள்கிறேன் CLICK HERE TO DOWNLOAD CM Cell தகவல்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete