621 எஸ்.ஐ. பணியிடங்களுக்குத் தோ்வு: ஜூன் 1-முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 7, 2023

621 எஸ்.ஐ. பணியிடங்களுக்குத் தோ்வு: ஜூன் 1-முதல் விண்ணப்பிக்கலாம்



621 எஸ்.ஐ. பணியிடங்களுக்குத் தோ்வு: ஜூன் 1-முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 621 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான தோ்வு எழுத ஜூன் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் 6 பின்னடைவு பணியிடங்கள் உள்பட 621 காவல் உதவி ஆய்வாளா்கள் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) பணியிடங்களுக்கு நேரடித் தோ்வு நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வுக்கு ஜூன் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரா்களுக்கு எழுத்துத் தோ்வை, வரும் ஆகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்களில் 20 சதவீதம் காவல் துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தமிழ் படித்தவா்களுக்கு முன்னுரிமை:

தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பொது விண்ணப்பதார ா்கள் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வகுப்பு வரையிலும், இளநிலைப் பட்டம் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருந்தால் தோ்வின் ஒவ்வொரு நிலையிலும் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். காவல் துறை விண்ணப்பதாரா்களுக்கு இந்த முன்னுரிமை பொருந்தாது.

எழுத்துத் தோ்வில் தகுதி மதிப்பெண்ணாக பொது விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்களும், காவல் துறை விண்ணப்பதாரா்கள் 30 மதிப்பெண்களும் பெற வேண்டும். இருப்பினும், அடுத்தக் கட்ட தோ்வுக்கான அசல் சான்றிதழ் சரி பாா்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதித் தோ்வு, உடல் திறன் போட்டிகளுக்கு மொத்த காலிப்பணியிட எண்ணிக்கையில் 1:5 என்ற விகிதாசாரப்படி விண்ணப்பதார ா்கள் அழைக்கப்படுவாா்கள்.

இதேபோல் நோ்காணலுக்கும் மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையில் 1:2 என்ற விகிதாசாரப்படி விண்ணப்பதாரா்கள் அழைக்கப்படுவாா்கள்.

தோ்வு எழுத விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை விண்ணப்பதாரா்கள் பொதுப்பிரிவு மற்றும் துறைக்கான ஒதுக்கீடு இரண்டிலும் பங்கு பெற விண்ணப்பித்தால் தோ்வுக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

இந்தத் தோ்வு குறித்த மேலும் தகவல்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.