அங்கன்வாடி மையங்களில் LKG, UKG மாணவர் சேர்க்கை எப்போது? - பள்ளிக் கல்வி துறை பதில்
சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், பெரும்பான்மையான தனியார் மழலையர் பள்ளிகளில் வரும் 2023-24 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து விட்டது. ஆனால், அங்கன்வாடி மையங்களில் உள்ள மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித் துறை, தற்போது ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நடைபெறுவதால், எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.