நீட் தேர்வு முடிந்த பின்னர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவினை வெளியிட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 17, 2023

நீட் தேர்வு முடிந்த பின்னர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவினை வெளியிட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

நீட் தேர்வு முடிந்த பின்னர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவினை வெளியிட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவினை நீட் தேர்வு முடிந்த பின்னர் வெளியிட வேண்டி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு தியாகராஜன் அவர்கள் கடிதம்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவினை நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி இரு நாட்கள் தள்ளி வெளியிட வேண்டுதல் சார்ந்து.

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

தமிழகத்தில் மே மாதம் 5-ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது என்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் வரும் மே மாதம் 7-ஆம் தேதி மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதிதான் தமிழ்நாடு பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பனிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு நிறைவடைந்தது. ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின்கீழ் (CBSE) பயிலும் மாணவர்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கானத் தயாரிப்புக்காலம் மிகவும் குறைவு. இந்நிலையில் நீட் தேர்வுக்கு இருநாட்கள் முன்பு வெளியிடப்படும் தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக மிகுந்த மனஉளைச்சலையும், கற்றலில் தொய்வையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர் முன்னேற்ற சங்க கடிதம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.