ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பணி நீட்டிப்பு வழங்க கோரி
தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
ஆனைமலையை சேர்ந்தவர் சுகந்தி (வயது 60). இவர் காளியாபுரம் கே.பி.எம். காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி பணி ஓய்வு பெற்றார்.
இதற்கிடையில் தனக்கு பணி நீட்டிப்பு கேட்டு பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினார். ஆனால் பணி நீட்டிப்பு வழங்க தாமதமானதால் நேற்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று மாலை முதல் தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
அலைக்கழிப்பு
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறியதாவது:-
பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் பணிபுரியும் வகையில் பணி நீட்டிப்பு வழங்கலாம் என்று அரசாணை உள்ளது. ஆனால் பணிநீட்டிப்பு கொடுக்காமல் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து கேட்டதற்கு அதிகாரிகள் சரியான பதில் கூறாமல் அலைக்கழிக்கின்றனர்.
எனவே அதிகாரிகள் வந்து உறுதி அளிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஆசிரியர்களை திரட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
ஆனைமலையை சேர்ந்தவர் சுகந்தி (வயது 60). இவர் காளியாபுரம் கே.பி.எம். காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி பணி ஓய்வு பெற்றார்.
இதற்கிடையில் தனக்கு பணி நீட்டிப்பு கேட்டு பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினார். ஆனால் பணி நீட்டிப்பு வழங்க தாமதமானதால் நேற்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று மாலை முதல் தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
அலைக்கழிப்பு
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறியதாவது:-
பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் பணிபுரியும் வகையில் பணி நீட்டிப்பு வழங்கலாம் என்று அரசாணை உள்ளது. ஆனால் பணிநீட்டிப்பு கொடுக்காமல் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து கேட்டதற்கு அதிகாரிகள் சரியான பதில் கூறாமல் அலைக்கழிக்கின்றனர்.
எனவே அதிகாரிகள் வந்து உறுதி அளிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஆசிரியர்களை திரட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.