ஆசிரியர்கள் விரும்பும் மையத்தில் ( ஒரே வருவாய் மாவட்டத்திற்குள்) விடைத்தாள் மதிப்பீடு செய்ய அனுமதி வழங்கி அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு (2018ஆம் ஆண்டு வெளிவந்த ஆணை) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

ஆசிரியர்கள் விரும்பும் மையத்தில் ( ஒரே வருவாய் மாவட்டத்திற்குள்) விடைத்தாள் மதிப்பீடு செய்ய அனுமதி வழங்கி அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு (2018ஆம் ஆண்டு வெளிவந்த ஆணை)

ஆசிரியர்கள் விரும்பும் மையத்தில் ( ஒரே வருவாய் மாவட்டத்திற்குள்) விடைத்தாள் மதிப்பீடு செய்ய அனுமதி வழங்கி அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு (2018ஆம் ஆண்டு வெளிவந்த ஆணை) Order of the Joint Director of Government Examinations (order issued in 2018) allowing evaluation of answer sheets at centers preferred by teachers (within the same revenue district)

அரசுத் தேர்வுகள் இயக்ககம்

இடைநிலைப் பொதுத் தேர்வு, மார்ச் / ஏப்ரல் 2018 – மதிப்பீட்டு முகாம் பணி - ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிக்கும் மதிப்பீட்டு மையத்தில் விடைத்தாள் மதிப்பீடு செய்ய -அனுமதி வழங்குதல் -சார்பு.

மார்ச் / ஏப்ரல் 2018 இடைநிலை பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணி தொடர்பாக, ஒரு வருவாய் மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்ட விடைத்தாட்கள் மதிப்பீட்டு முகாம்களில், ஆசிரியர்கள் தான் சார்ந்த கல்வி மாவட்டத்திற்கு அருகிலுள்ள மற்றொரு கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், ஆசிரியர்களை அவர்கள் விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணியமர்த்தப்படலாம். இதனால் அந்தக் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வேறொரு முகாமில் விடைத்தாள் திருத்தும் பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழ்நிலை ஏற்படுமேயானால், மதிப்பீட்டுப் பணி நிறைவுறாத முகாமிற்குச் சென்று பணியாற்றி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியினை குறித்த தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதிக்கலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.