கருணைப்பணி நியமனங்கள் பரம்பரை உரிமை கிடையாது - ஐகோர்ட் கிளை அதிரடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 4, 2023

கருணைப்பணி நியமனங்கள் பரம்பரை உரிமை கிடையாது - ஐகோர்ட் கிளை அதிரடி

கருணைப்பணி நியமனங்கள் பரம்பரை உரிமை கிடையாது - ஐகோர்ட் கிளை அதிரடி

திருச்சி யைச் சேர்ந்தவர் யோகம் லர். சார்பதிவாளரான இவர் 20,7-2020ல் இறந்தார். இவரது மகன் வினோத் கண்ணா,தனக்குகருணை அடிப்படையில் வாரிசுப் பணி வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை பரிசீலிக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வினோத்கண்ணாவின் சகோதரி மகாலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளை யில் அப்பீல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன்,கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது இறந்ததாயின் பணப்பலன் களை வினோத் கண்ணா பெற்றதாகவும், வீடு மற் றும் நிலங்கள் அவருக்கு சொந்தமாகஉள்ளதாகவும், அவர் இறந்ததனது தாயை சார்ந்திருக்கவில்லை என் றும் மகாலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், இறந்த அரசு ஊழி யர் குடும்பத்தில் ஏற்பட் டுள்ள நெருக்கடி நிலையை சமாளித்திடும் வகையில் தான் கருணைப் பணி நியமனங்கள் வழங்கப்படு கிறது. இதற்கு போதுமான ஆவணங்களை வினோத் கண்ணா வைத்துள்ளார் என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில், கருணைப் பணி நியமனம் என்பது இறந்த அரசு ஊழியரின் பரம்பரை வழி உரிமை கிடையாது. இதற் கென அரசின் நிபந்தனை கள் பூர்த்தி செய்யப்பட் டால் மட்டுமே கருணைப் பணி நியமனம் பெற முடி யும். இதை உரிமையாக யாரும் கேட்க முடியாது. எனவே,இந்த அப்பீல் மனு வில் போதிய முகாந்திரம் இல்லை என்பதால் தள்ளு படிசெய்யப்படுகிறது என கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.