சென்னையில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் 139 பள்ளிகள் மாநகராட்சியுடன் இணைப்பு - அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 4, 2023

சென்னையில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் 139 பள்ளிகள் மாநகராட்சியுடன் இணைப்பு - அரசாணை வெளியீடு

சென்னை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 139 அரசு பள்ளிகள் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்கப்பட உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதியில் 790 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அப்பள்ளிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 138 பள்ளிகள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளிஎன மொத்தம் 139 அரசு பள்ளிகள் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்கப்பட உள்ளன. எஞ்சியுள்ள அரசு பள்ளிகள் தொடர்ந்துபள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும்.

இதுதொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்

பள்ளிக் கல்வி - பெருநகர சென்னை மாநகராட்சியில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதியில் உள்ள 790 பள்ளிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி உட்பட 139 பள்ளிகளை மட்டும் சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்குதல் மற்றும் மீதமுள்ள பிற துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.