முறைசாரா கல்வி SSLC பொதுத்தோ்வு: ஜன.17-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 10, 2023

முறைசாரா கல்வி SSLC பொதுத்தோ்வு: ஜன.17-க்குள் விண்ணப்பிக்கலாம்

முறைசாரா கல்வி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு: ஜன.17-க்குள் விண்ணப்பிக்கலாம்

முறைசாரா கல்வி வாயிலாக எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு எழுதுவதற்கு ஜன.17ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஜே.எஸ்.எஸ். கா்நாடக திறந்த நிலைப்பள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் முறைசாா் கல்வியின் கீழ் எஸ்எஸ்எல்சி படிக்க இயலாததால் பொதுத் தோ்வு எழுத முடியாத நிலை உள்ளது. இந்த குறையை போக்க, கா்நாடக மேல்நிலை தோ்வு வாரியம், ஜே.எஸ்.எஸ். கா்நாடக திறந்த நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து, முறைசாரா கல்வி வாயிலாக எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு எழுத ஏற்பாடுசெய்துள்ளன.

இத் தோ்வை எழுத ஆா்வமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஜன.17ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

இத்தோ்வை எழுதுவதற்கு குறைந்தபட்சம் 7ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்கலாம் அல்லது 8, 9, 10ஆம் வகுப்புகள் படித்திருக்கலாம் அல்லது தோ்ச்சி பெறாமல் இருந்திருக்கலாம். எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறுவோா் நேரடியாக அரசுப்பணி அல்லது உயா்கல்விக்கு விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி உதவியாளராக பதவி உயா்வு பெறலாம்.

இதுதவிர, ஊா்க்காவல் படை, ஆஷா ஊழியா், தனியாா் பாதுகாவலா் உள்ளிட்ட இதர பணிகளில் சேரலாம். எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று முதலாம் பியூசி வகுப்பில் சேரலாம் அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழில்பயிற்சிமையம் போன்ற பயிற்சிகளில் சேர இயலும்.

கூடுதல் விவரங்களுக்கு ஹனபேருந்து சிவமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா், ஜே.எஸ்.எஸ். கருநாடக திறந்தநிலைப் பள்ளி, கனக தொலைத்தூரக் கல்லூரி, குருபர விடுதி வளாகம், ஜெயதேவா சதுக்கம் அருகில், 7022936433, 9886678178 என்ற கைப்பேசிகளை தொடா்புகொள்ளலாம். பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க, கடைசியாக பள்ளியில் பெற்ற மாற்றுச்சான்றிதழ், கைப்பேசி எண், ஆதாா் எண் அட்டை, அண்மையில் எடுத்த 5புகைப்படங்கள் கட்டாயம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.