பணிப் பதிவேடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளை சரிபார்த்தல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 2, 2023

பணிப் பதிவேடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளை சரிபார்த்தல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

பணிப் பதிவேடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளை சரிபார்த்தல் - தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

முதன்மைக்கல்வி அலுவலகம், தஞ்சாவூர்

ந.க.எண். 13665/ஆ2 / 2022 நாள். 02.01.2023 நகல்- தொடர் நடவடிக்கைகாக அனுப்பப்படுகிறது

பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு / மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டாவிடுப்பு மற்றும் இதர பதிவுகளை 06.01.2023 வரையிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள 07.01.2023 அன்று சார்ந்த அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டினை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 07.01.2023 சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் விருப்பம் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளது தேதி வரை பணிப்பதிவேட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளை சரிபார்த்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 07.01.2023 சனிக்கிழமையன்று சிறப்பு

முகாம் நடத்திடவும், அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோரின் பணிப்பதிவேடுகளை சார்ந்த பள்ளிச்செயலர்களால் பராமரிக்கப்பட்டு வருவதால் பள்ளிச் செயலர்களுக்கு தகவல் தெரிவித்து சிறப்பு முகாம் நடத்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு- கடித நகல் தமிழ்நாட்டில் உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களது பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திட வழங்கப்படுகின்றன.

1.06.01.2023 வரை விருப்பம் உள்ள ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள்/அலுவலகங்களுக்குச் சென்று பணிப்பதிவேட்டிலுள்ள பதிவுகளை சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் 07.01.2023 அன்று அனைவரும் தங்களது பணிப்பதிவேடுகளில் உள்ள பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள சிறப்பு முகாம் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நடைபெறும்.

2. அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோரின் பணிப்பதிவேடுகள் சார்ந்த பள்ளிச் செயலர்களால் பராமரிக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலரது ஒப்பளிப்பு பெறப்படுவதால், சார்ந்த விருப்பம் உள்ள ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இதனை சம்பந்தப்பட்ட பள்ளிச் செயலர்கள்/அலுவலகங்களில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இப்பணி வரும் 7.1.2023 அன்றே முடிக்கப்பட வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.