ஓட்டுநரை தவிர வேறு யாரும் பேருந்தை கட்டாயம் இயக்கக் கூடாது - போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 31, 2023

ஓட்டுநரை தவிர வேறு யாரும் பேருந்தை கட்டாயம் இயக்கக் கூடாது - போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

ஓட்டுநரை தவிர வேறு யாரும் பேருந்தை கட்டாயம் இயக்கக் கூடாது - போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

No person other than the driver shall be required to drive the bus - Transport Department Circular



நமது மாநகர போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய வருகிறது.

மத்திய பணிமனையில் 28.01.2023 அன்று நடத்துநர், ஓட்டுநருக்கு பதிலாக பேருந்தினை எடுத்து டீஸல் பங்கினை இடித்து சேதமேற்படுத்தியுள்ளது இதனை உறுதி செய்கிறது.

எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் பேருந்தினை பணிமனை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்க கூடாது.

கிளைமேலாளர்கள் மற்றும் பணியிலுள்ள மேற்பார்வையாளர்கள் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும். கிளைமேலாளர்கள் உரிய தகவலை ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அனைவரும் அறியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டவும். தொடர் முயற்சியாக பயிற்சி பள்ளிக்கு வரும் அனைவருக்கும் தெரியப்படுத்த இச்சுற்றறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.