செவிலியர் பணி விண்ணப்பம் வரவேற்பு - வரும் 27ம் தேதி கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 15, 2023

செவிலியர் பணி விண்ணப்பம் வரவேற்பு - வரும் 27ம் தேதி கடைசி நாள்

செவிலியர் பணி விண்ணப்பம் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்டம்

மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக, ஒப்பந்த செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து, செங்கை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக, காலிப்பணியிடங்களில் 35 ஒப்பந்த செவிலியர் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் https://chengalpqttu.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்து, சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன், வரும் 27ம் தேதி மாலை 5:00 மணிக்குள், செங்கல்பட்டு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மற்றும் மாவட்ட நலவாழ்வு சங்க செயலாளருக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.