பிளஸ் 2 தேர்வுக் கட்டணம்: பள்ளிகளுக்கு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 5, 2023

பிளஸ் 2 தேர்வுக் கட்டணம்: பள்ளிகளுக்கு உத்தரவு

பிளஸ் 2 தேர்வுக் கட்டணம்: பள்ளிகளுக்கு உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக் கட்டணத்தை வெள்ளிக்கிழமை முதல் ஜன. 20- ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2022-2023) பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடமி ருந்து (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து) தேர்வுக் கட்ட ணத்தைப் பெற்று அந்தத் தொகையை வியாழக்கிழமை முதல் ஜன.20-ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்க கத்துக்கு இணையவழியில் செலுத்த வேண்டும். சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தி யப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வெழு தும் மாணவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு பெறத் தகுதி யுடைவர்கள் அல்லர். இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.

எனவே பிளஸ் 2 பொதுத்தேர்வுக் கட்டணம், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக் கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த பள்ளிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.