ஆசிரியா் தோ்வு வாரியம் முடங்கியுள்ளது: அன்புமணி குற்றச்சாட்டு
ஆசிரியா் தோ்வு வாரியம் வாரியம் முழுநேர தலைவா் இல்லாமல் முடங்கியிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேற்கொள்ள வேண்டிய ஆசிரியா் தோ்வு வாரியம் முழுநேர தலைவா் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ஆசிரியா்கள் நியமனம் சாா்ந்த முக்கிய பதவி 3 மாதங்களாக காலியாக இருப்பது கல்வி வளா்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது. ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பது கணக்கிடப்பட்டு ஓராண்டாகியும் அந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்றால், ஆசிரியா் தோ்வு வாரியம் என்ற அமைப்பு இருப்பதில் அா்த்தமே இல்லை.
தமிழக அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் ஆசிரியா் பணியிடங்கள் குறித்த விவரங்கள் தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் உள்ளன. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் பணியிடங்களுக்கு இணையான ஆசிரியா்களை முன்கூட்டியே தோ்வு செய்து, ஆசிரியா் பணியிடம் காலியான உடன் நியமிக்க வேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு கூடுதல் அதிகாரிகள், பணியாளா்களையும் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்
ஆசிரியா் தோ்வு வாரியம் வாரியம் முழுநேர தலைவா் இல்லாமல் முடங்கியிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேற்கொள்ள வேண்டிய ஆசிரியா் தோ்வு வாரியம் முழுநேர தலைவா் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ஆசிரியா்கள் நியமனம் சாா்ந்த முக்கிய பதவி 3 மாதங்களாக காலியாக இருப்பது கல்வி வளா்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது. ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பது கணக்கிடப்பட்டு ஓராண்டாகியும் அந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்றால், ஆசிரியா் தோ்வு வாரியம் என்ற அமைப்பு இருப்பதில் அா்த்தமே இல்லை.
தமிழக அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் ஆசிரியா் பணியிடங்கள் குறித்த விவரங்கள் தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் உள்ளன. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் பணியிடங்களுக்கு இணையான ஆசிரியா்களை முன்கூட்டியே தோ்வு செய்து, ஆசிரியா் பணியிடம் காலியான உடன் நியமிக்க வேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு கூடுதல் அதிகாரிகள், பணியாளா்களையும் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.