இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 30, 2022

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கடிதம்

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வருக்கு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கடிதம் - A letter from the National Union of Teachers to the Principal to immediately fulfill the legitimate demand of secondary teachers

சென்னையில் நடைபெற்றுவரும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு அளித்தும் அவர்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கடிதம்



இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை சரி செய்ய கோருதல் சார்பு.

வணக்கம். முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் 2000 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊதியக்குழுவினால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் பெருமளவு முரண்பாடு உள்ளது. இதனை சரி செய்ய வேண்டி பல வருடங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ம், தங்களின் நேர்தல் அறிக்கை எண் 311 இல் சம வேலைக்கு சம ஊதியம் கண்டிப்பாக வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தீர்கள்.

தற்போது பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் பல நாட்களாக தொடர் உண்ணாவிரதம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு ஆதரவு அளிக்கிறது என்பதனை தெரிவித்துக்கொள்வதோடு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையினை தாங்கள் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.