7 ஆண்டுக்கு முந்தைய மத்திய அரசு திட்டம் வானவில் மன்றம் பெயரில் புதிதாக துவக்கம்
ஏழு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகம் செய்த, 'ராஷ்ட்ரிய அபிஷ்கார் அபியான்' திட்டம், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'வானவில் மன்றம்' என்ற பெயரில், இன்று புதிதாக துவக்கப்படுகிறது.
மத்திய அரசின் நிதியுதவியை பெற்றுத் தரும், 'சமக்ர சிக் ஷா' என்ற ஒருங்கிணைந்த கல்வியின் தமிழக இயக்குனரகம் வழியே, வானவில் மன்றம் என்ற திட்டம்,
இந்த திட்டம் குறித்து, சமக்ரசிக் ஷா தமிழக இயக்குனரகம் தரப்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:
ஒரு பள்ளிக்கு, 1,200 ரூபாய் வீதம், 1.58 கோடி ரூபாய் மதிப்பில், இந்த மன்றம் துவங்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்த ஆர்வத்தை வளர்க்க, குழு அமைக்கப்படும். அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் போன்ற துறைகளை இணைத்து, 'ஸ்டெம்' என்ற பெயரில், செயல்வழி கற்றல் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திட்டம் குறித்து, அரசு பள்ளிகளின் மூத்த ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், இன்று துவக்கப்படும், வானவில் மன்றம் என்ற திட்டம், 201௫ல் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட, ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான் திட்டம் தான்.
மாணவர்கள் மத்தியில், அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை ஏற்படுத்த, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் நிபுணர்களும், ஆலோசனை வழங்கும் வகையில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த ஒருங்கிணைந்த அறிவியல், கணித திட்டம், கடந்த ஆட்சியிலேயே தமிழக பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தற்போது, வானவில் மன்றம் என்ற பெயரில், ராஷ்ட்ரிய அபிஷ்கார் அபியான் திட்ட அம்சங்கள் அமலுக்கு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகம் செய்த, 'ராஷ்ட்ரிய அபிஷ்கார் அபியான்' திட்டம், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'வானவில் மன்றம்' என்ற பெயரில், இன்று புதிதாக துவக்கப்படுகிறது.
மத்திய அரசின் நிதியுதவியை பெற்றுத் தரும், 'சமக்ர சிக் ஷா' என்ற ஒருங்கிணைந்த கல்வியின் தமிழக இயக்குனரகம் வழியே, வானவில் மன்றம் என்ற திட்டம்,
இந்த திட்டம் குறித்து, சமக்ரசிக் ஷா தமிழக இயக்குனரகம் தரப்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:
ஒரு பள்ளிக்கு, 1,200 ரூபாய் வீதம், 1.58 கோடி ரூபாய் மதிப்பில், இந்த மன்றம் துவங்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்த ஆர்வத்தை வளர்க்க, குழு அமைக்கப்படும். அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் போன்ற துறைகளை இணைத்து, 'ஸ்டெம்' என்ற பெயரில், செயல்வழி கற்றல் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திட்டம் குறித்து, அரசு பள்ளிகளின் மூத்த ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், இன்று துவக்கப்படும், வானவில் மன்றம் என்ற திட்டம், 201௫ல் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட, ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான் திட்டம் தான்.
மாணவர்கள் மத்தியில், அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை ஏற்படுத்த, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் நிபுணர்களும், ஆலோசனை வழங்கும் வகையில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த ஒருங்கிணைந்த அறிவியல், கணித திட்டம், கடந்த ஆட்சியிலேயே தமிழக பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தற்போது, வானவில் மன்றம் என்ற பெயரில், ராஷ்ட்ரிய அபிஷ்கார் அபியான் திட்ட அம்சங்கள் அமலுக்கு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.