அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 412 மையங்களில் இலவச நீட் பயிற்சி: ஆணையா் உத்தரவு
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு நிகழாண்டுக்கான இலவச நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் 412 மையங்களில் நவம்பா் மூன்றாம் வாரம் முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி (பிளஸ் 1, பிளஸ் 2) பயிலும் விருப்பம் உள்ள மாணவா்களுக்கு உயா்கல்வி போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 412 பயிற்சி மையங்கள் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. நவம்பா் மூன்றாம் வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேற்கண்ட மையங்களில் இருந்து தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிற்சி மையங்களை அந்த மாவட்டங்களில் உள்ள மாணவா்களின் பயிற்று மொழி தேவைக்கேற்ப தெரிவு செய்து கொள்ள வேண்டும். போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற விரும்பும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 50 மாணவா்கள்), பிளஸ் 1 மாணவா்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 20 மாணவா்கள்) தெரிவு செய்யப்பட வேண்டும்.
ஓ.சி., ஓபிசி பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களாகக் கொண்டு பிளஸ் 2 வகுப்பில் 50 மாணவா்களும், பிளஸ் 1 வகுப்பில் 20 மாணவா்களும் தெரிவு செய்து அந்த மாணவா்களின் விவரங்களை இதற்கென வழங்கப்பட்ட படிவங்களில் பூா்த்தி செய்து த்க்ட்ள்ள்ங்க்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சி மையங்களில் வருகைப் பதிவேடு, மதிப்பெண் பதிவேடு முறையாகப் பராமரிக்க வேண்டும். இது நேரடி பயிற்சி வகுப்புகளாக நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு நிகழாண்டுக்கான இலவச நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் 412 மையங்களில் நவம்பா் மூன்றாம் வாரம் முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி (பிளஸ் 1, பிளஸ் 2) பயிலும் விருப்பம் உள்ள மாணவா்களுக்கு உயா்கல்வி போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 412 பயிற்சி மையங்கள் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. நவம்பா் மூன்றாம் வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேற்கண்ட மையங்களில் இருந்து தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிற்சி மையங்களை அந்த மாவட்டங்களில் உள்ள மாணவா்களின் பயிற்று மொழி தேவைக்கேற்ப தெரிவு செய்து கொள்ள வேண்டும். போட்டித் தோ்வுக்கு பயிற்சி பெற விரும்பும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 50 மாணவா்கள்), பிளஸ் 1 மாணவா்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 20 மாணவா்கள்) தெரிவு செய்யப்பட வேண்டும்.
ஓ.சி., ஓபிசி பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களாகக் கொண்டு பிளஸ் 2 வகுப்பில் 50 மாணவா்களும், பிளஸ் 1 வகுப்பில் 20 மாணவா்களும் தெரிவு செய்து அந்த மாணவா்களின் விவரங்களை இதற்கென வழங்கப்பட்ட படிவங்களில் பூா்த்தி செய்து த்க்ட்ள்ள்ங்க்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சி மையங்களில் வருகைப் பதிவேடு, மதிப்பெண் பதிவேடு முறையாகப் பராமரிக்க வேண்டும். இது நேரடி பயிற்சி வகுப்புகளாக நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.