தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் 2,760 ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 30, 2022

தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் 2,760 ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை

தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் 2,760 ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை

பள்ளிக் கல்வித் துறையில் தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 2,760 ஆசிரியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதற்கான ஆணையை பள்ளிக்கல்வித் துறை அளித்தது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, அனைத்து மாவட்டக் கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதம்:

தமிழகத்தில் 1990 முதல் 2019-ஆம் கல்வியாண்டு வரையான பல்வேறு காலங்களில் தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு 300 தலைமை ஆசிரியா்கள், 2,460 முதுநிலை ஆசிரியா்கள் என மொத்தம் 2,760 தற்காலிக பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன. இவா்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டது.

இந்த பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.

இதனால், இந்த ஆசிரியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி பள்ளிக்கல்வி ஆணையா் கடிதம் அனுப்பியுள்ளாா். அதையேற்று 2,760 ஆசிரியா்களுக்கும் நவம்பா் மாத ஊதியம் வழங்குவதற்கான ஆணை அளிக்கப்படுகிறது.

எனவே, சாா்ந்த அலுவலா்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் போது, அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.