TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (28.10.2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 28, 2022

TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (28.10.2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீடு எண்: 69/2022

நாள்:28.10.2022

செய்திக்குறிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA கடந்த (தொகுதி-II/IIA) இற்கான 21.05.2022 அன்று நடைபெற்றது. எழுத்துத்தேர்வு முதல்நிலை

2. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்பாக பல்வேறுகட்ட

3.இதனைத் தொடர்ந்து மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் மேற்படித் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

4. இது தொடர்பாக செய்தி/சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை (www.tnpsc.gov.in) மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

பி.உமா மகேஸ்வரி, இஆப., செயலாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.