நாளை நவம்பர் 1-ம் தேதி (01-11-22) நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் சார்பாக தலைமையாசிரியர், பள்ளிமேலான்மைக் குழுவின்(SMC) தலைவர்/ உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்& வழிகாட்டுதல்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 31, 2022

நாளை நவம்பர் 1-ம் தேதி (01-11-22) நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் சார்பாக தலைமையாசிரியர், பள்ளிமேலான்மைக் குழுவின்(SMC) தலைவர்/ உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்& வழிகாட்டுதல்கள்

நவம்பர் 1-ம் தேதி (01-11-22) நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் சார்பாக தலைமையாசிரியர், பள்ளிமேலான்மைக் குழுவின்(SMC) தலைவர்/ உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

முன்னவர்: திரு. இரா.சுதன்,இ.ஆ.ப.

நக.எண்.2223/C7/பமேகு/ஒபக/2022 நாள்: 26.10.2022

பொருள்:

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களை சிறப்பு கிராம சபை கூட்டத்தின் (01:11.2022) கூட்டப்பொருளாக இணைத்தல்

பார்வை:

சார்பு பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் இணை செயல்முறைகள்.

ந.க.எண். 2223/C7/பமேகு/ஒபக/2022 நாள்: 21.07.2022

செயல் முறைகள்:

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஏப்ரல்-ஜுலை மாதங்களில் நடைப்பெற்று. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், புதிய உறுப்பினர்களைக் கொண்டு, மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது. இக்கல்விக்குழுவில் பள்ளி வளர்ச்சிக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் பள்ளி வளர்ச்சிக்கு கிராம பஞ்சாயத்துகளின் பங்களிப்பை முழுமையாக பயன்படுத்த முடியும். எனவே, கிராம சபை கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல், உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, மற்றும் இடைநிற்றல் தொடர்பான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்துகொள்வது அவசியம். எனவே நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பாக கீழ்க்கண்டவழிமுறைகளைப் பின்பற்றி நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

வழிகாட்டுதல்கள்:

1. நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர், பள்ளிமேலாண்மைக் குழுவின்தலைவர் / உறுப்பினர்கள் கலந்துகொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி கற்றல் கற்பித்தல், மற்றும் உட்கட்டமைப்பு போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும்.

2. பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர்/ உறுப்பினர்கள் தங்கள் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி மற்றும் கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை முறைப்படி தொகுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, கற்றல் கற்பித்தல், பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் மாணவர் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை முறைப்படி தொகுத்து கிராம சபை கூட்டத்தில் ஆலோசனைகளுக்காக சமர்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. நவம்பர் 1ஆம்தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இத்தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு அது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

5. கிராம சபை கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிராம மக்கள் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அறிந்துகொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும். மேலும் கிராமப் பஞ்சாயத்துக்கள் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட முடியும்.

6. கிராம சபை கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை/ முடிவுகளை அடுத்த மாத பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பகிர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் கிராம சபை கூட்டத்திலும் பள்ளி மேலாண்மைக் குழு முதன்மைக் கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் பார்வையாளர்களாக கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்காணும்பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்கள் சார்ந்து கிராம சபை கூட்டத்தில் முக்கிய கூட்டப்பொருளில் ஒன்றாக இணைக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.