There is no place in Madurai that is not looking for new educational offices; Officers in confusion மதுரையில் புதிய கல்வி அலுவலகங்களுக்கு தேடாத இடமில்லை; குழப்பத்தில் அதிகாரிகள்
மதுரையில் புதிய கல்வி அலுவலகங்களுக்கான கட்டட வசதி இல்லாததால் அவற்றை எங்கே அமைப்பது என அதிகாரிகள் தேடி அலைவது ஆரம்பமாகியுள்ளது.
மாவட்டத்தில் மதுரை, உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம் என இருந்த கல்வி மாவட்டங்கள் மறுசீரமைப்பிற்கு பின் உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டம் கலைக்கப்பட்டது. மேலும் ஐ.எம்.எஸ்., (மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம்) மதுரை, மேலுார் தொடக்க கல்வி அலுவலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. புதிய அலுவலகங்கள் செயல்பட அரசு அலுவலகங்கள் கிடைக்காததால் எங்கே அமைப்பது என இடம் தேடி அதிகாரிகள் அலைகின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருமங்கலம் கல்வி மாவட்டம் தற்போது ஐ.எம்.எஸ்., அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகம் மதுரை சி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தில் அமைகிறது. ஆனால் இந்த ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தில் போதிய இடம் இல்லை.அதுபோல் மதுரை தொடக்க கல்வி அலுவலகம் அமைய உள்ள ஆர்.எம்.எஸ்., ரோடு அலுவலகத்தில் தற்போது தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், தெற்கு பி.இ.ஓ., அலுவலகம் செயல்படுகின்றன.
இந்த இரண்டு அலுவலகங்களுக்கு மாற்று இடங்கள் இல்லை. மேலுார் தொடக்க கல்வி அலுவலகம் மேலுாரில் அமையுமா அல்லது ஆசிரியர், அலுவலர் எளிதில் வந்துசெல்லும் வகையில் மதுரையில் அமையுமா என்ற குழப்பம் நீடிக்கிறது. அவ்வாறு மதுரையில் அமைந்தால் அதற்கான அலுவலகத்திற்கு எங்கே போவது. ஆனால் இம்மாத்திற்குள் அலுவலகங்களை முடிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால் தலைசுற்றிக் கிடக்கிறோம் என்றனர்.
மதுரையில் புதிய கல்வி அலுவலகங்களுக்கான கட்டட வசதி இல்லாததால் அவற்றை எங்கே அமைப்பது என அதிகாரிகள் தேடி அலைவது ஆரம்பமாகியுள்ளது.
மாவட்டத்தில் மதுரை, உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம் என இருந்த கல்வி மாவட்டங்கள் மறுசீரமைப்பிற்கு பின் உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டம் கலைக்கப்பட்டது. மேலும் ஐ.எம்.எஸ்., (மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம்) மதுரை, மேலுார் தொடக்க கல்வி அலுவலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. புதிய அலுவலகங்கள் செயல்பட அரசு அலுவலகங்கள் கிடைக்காததால் எங்கே அமைப்பது என இடம் தேடி அதிகாரிகள் அலைகின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருமங்கலம் கல்வி மாவட்டம் தற்போது ஐ.எம்.எஸ்., அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகம் மதுரை சி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தில் அமைகிறது. ஆனால் இந்த ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகத்தில் போதிய இடம் இல்லை.அதுபோல் மதுரை தொடக்க கல்வி அலுவலகம் அமைய உள்ள ஆர்.எம்.எஸ்., ரோடு அலுவலகத்தில் தற்போது தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், தெற்கு பி.இ.ஓ., அலுவலகம் செயல்படுகின்றன.
இந்த இரண்டு அலுவலகங்களுக்கு மாற்று இடங்கள் இல்லை. மேலுார் தொடக்க கல்வி அலுவலகம் மேலுாரில் அமையுமா அல்லது ஆசிரியர், அலுவலர் எளிதில் வந்துசெல்லும் வகையில் மதுரையில் அமையுமா என்ற குழப்பம் நீடிக்கிறது. அவ்வாறு மதுரையில் அமைந்தால் அதற்கான அலுவலகத்திற்கு எங்கே போவது. ஆனால் இம்மாத்திற்குள் அலுவலகங்களை முடிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால் தலைசுற்றிக் கிடக்கிறோம் என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.