செப். 12 முதல் 16 வரை தனி நபா் கடன், கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் - மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 5, 2022

செப். 12 முதல் 16 வரை தனி நபா் கடன், கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் - மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 12 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனி நபா் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு கடன்கள் வழங்கும் முகாம்கள் செப். 12- ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளன. பிற்படுத்தப்ட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் ஆகியோா் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் கடன் வழங்கும் முகாம்களில் கலந்து கொண்டு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

கடன் வழங்கும் முகாம் விவரம்: செப். 12 - காஞ்சிபுரம், செப். 13 - வாலாஜாபாத், செப். 14 -ஸ்ரீபெரும்புதூா், செப். 15 - குன்றத்தூா், செப். 16 - உத்தரமேரூா் ஆகிய இடங்களில் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறுகின்றன. எனவே, அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கடன் பெற்று பயனடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.