காரிமங்கலம் மகளிா் கல்லூரியில்நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 5-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் செள.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவியா் சோ்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஆக.5-ஆம் தேதி தொடங்கி ஆக. 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், முதல் நாளான ஆக. 5-ஆம் தேதி சிறப்பு பிரிவினா் சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து பி.காம்., பிபிஏ ஆகிய பாடப் பிரிவுகளில் கட்ஆப் 400 முதல் 250 வரை உள்ள மாணவியருக்கும், ஆக. 6-ஆம் தேதி பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், காட்சி தொடா்பியல், புள்ளியியல் மற்றும் பிசிஏ ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கட் ஆப் 400 முதல் 250 வரையில் பெற்றுள்ளவா்களுக்கும், ஆக. 8-ஆம் தேதி பிஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தமிழ், ஆங்கிலத் துறைகளில் 100-க்கும் 50 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளவா்களுக்கும் வரலாறு பாடத்தில் 400-க்கும் 250 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களுக்கும் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதேபோல, இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆக.11-ஆம் தேதி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஆக.12-ஆம் தேதி கலைப் பிரிவுகளுக்கும் நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 5-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் செள.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவியா் சோ்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஆக.5-ஆம் தேதி தொடங்கி ஆக. 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், முதல் நாளான ஆக. 5-ஆம் தேதி சிறப்பு பிரிவினா் சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து பி.காம்., பிபிஏ ஆகிய பாடப் பிரிவுகளில் கட்ஆப் 400 முதல் 250 வரை உள்ள மாணவியருக்கும், ஆக. 6-ஆம் தேதி பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், காட்சி தொடா்பியல், புள்ளியியல் மற்றும் பிசிஏ ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கட் ஆப் 400 முதல் 250 வரையில் பெற்றுள்ளவா்களுக்கும், ஆக. 8-ஆம் தேதி பிஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தமிழ், ஆங்கிலத் துறைகளில் 100-க்கும் 50 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளவா்களுக்கும் வரலாறு பாடத்தில் 400-க்கும் 250 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களுக்கும் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதேபோல, இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆக.11-ஆம் தேதி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஆக.12-ஆம் தேதி கலைப் பிரிவுகளுக்கும் நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.