TNPSC Group-IV போட்டித் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 22, 2022

TNPSC Group-IV போட்டித் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group-IV-ல் அடங்கியுள்ள பதவிக்கான போட்டித் தேர்வு (தேர்வு நாள்: 24.07.2022 மு.ப.) எழுதும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு,

தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் "பென்னாகரம் வட்டம், Hall No.014, அரசு உயர்நிலைப் பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல்: கோட்டையூர், பென்னாகரம் (Tk), தருமபுரி ( Dt)" என உள்ளது. இத்தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட தேர்வர்கள் Hall No.014-ல் "அரசு உயர்நிலைப் பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல்: கொட்டாவூர், பென்னாகரம் (Tk), தருமபுரி ( Dt)" என்ற தேர்வு மையத்திற்குச் சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது. மேலும்,

இம்மையம் பென்னாகரத்திலிருந்து "மேச்சேரி செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவில்" உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:

திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்; தேர்வு- Group-IV- பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 24.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மட்டும் தருமபுரி மற்றும் அரூர் கோட்டங்களில் மொத்தம் 242 தேர்வு மையங்களில் சுமார் 66800 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.

தேர்வு மையங்களில்; தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில்; செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் "பென்னாகரம் வட்டம். Hall No.014, உயர்நிலைப் பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல்: கோட்டையூர், அரசு பென்னாகரம் (Tk), தருமபுரி ( Dt)" என உள்ளது. இத்தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட தேர்வர்கள் Hall No.014-ல் "அரசு உயர்நிலைப் பள்ளி, சத்தியநாதபுரம் அஞ்சல், மைல்கல்: கொட்டாவூர், பென்னாகரம் (Tk), தருமபுரி (Dt)" என்ற தேர்வு மையத்திற்குச் சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இம்மையம் பென்னாகரத்திலிருந்து "மேச்சேரி செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவில்" உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஓம்/- திருமதி.கி.சாந்தி இஆப., மாவட்ட ஆட்சித்தலைவர், தருமபுரி மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.