புத்தாக்க அறிவியல் மானக் விருது - 2022-2023ஆம் ஆண்டிற்கான புதிய பதிவு - தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநரின் கடிதம்..
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சென்னை -25 புத்தாக்க அறிவியல் மாளக் விருது - 2022-2022 ஆம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது தொடர்பாக
பார்வை:
ஒன்றிய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை, புதுதில்லி கடித எண் F.No.1/01/2019-1AM தேதி 21-06-2022
வணக்கம்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 2022 ஜூலை 1-ந்தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ததைப் போல www.inspireawands-st.pov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
உயர்நிலை. மேல்நிலைப்பள்ளிகள் வகுப்புக்கு ஒருவர். என ஐந்து பேர்களையும், நடுநிலைப்பள்ளிகள் ஒரு வகுப்புக்கு ஒருவர் என மூன்று பேரையும் பதிவு செய்யலாம். கூடுதலாகப் பதிவு செய்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். கடவுச்சொல்லை மறந்துவிட்ட பள்ளிகள் Forget Password என்ற பட்டனை அழுத்தி அதன் மூலம் தங்கள் கடவுச்சொல்லைப் புதுப்பித்துக்கொள்ளலாம். User ID மறந்துவிட்டால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் மூலமாக இதை மாற்ற இயலாது. தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்கனவே பதிவு செய்த பள்ளிகள் 22-23இல் பதிவுசெய்யும் போது தங்கள் மாவட்டத்தை மாற்றிப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வங்கிக் கணக்கு எண்களைப் பதிவு செய்யும்போது வங்கிக் கணக்கு மாணவரின் பெயரில் தனியான கணக்காக இருக்க வேண்டும். வங்கிக்கணக்கு தொடர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். கணக்கு எண், வங்கியின் பெயர், IFSC Code No முதலியவற்றைப் பிழையின்றிக் குறிப்பிட வேண்டும். இவற்றைப் பதிவு செய்யும்போது. மிகுந்த கவனம் தேவை.
பதிவு செய்ததிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒவ்வொரு வருக்கும் ரூ 10,000/- அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
மின்னஞ்சல், தொலைபேசி எண் முதலியவற்றைக் குறிப்பிடும் போது பள்ளியின் மின்னஞ்சல், பள்ளித் தலைமை ஆசிரியரின் அலைபேசி அல்லது பள்ளியின் தொலைபேசி முதலியவற்றைக் குறிப்பது நல்லது.
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் பற்றிய தகவல் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் என்பதால் அதில் கவனம் தேவை. பள்ளித் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும்போது அலைபேசி எண்கள் மாற்றத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது மிக அவசியம். மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான இணையதளம் 2022, ஜூலை 1-ந் தேதியிலிருந்து 2022 செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே இயங்கும். எனவே பதிவுகளை உடனே செயல்படுத்துமாறு பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டுகிறோம். இந்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளும் தவறாமல் பதிவு செய்ய ஆவன் செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பார்வை:
ஒன்றிய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை, புதுதில்லி கடித எண் F.No.1/01/2019-1AM தேதி 21-06-2022
வணக்கம்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 2022 ஜூலை 1-ந்தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ததைப் போல www.inspireawands-st.pov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
உயர்நிலை. மேல்நிலைப்பள்ளிகள் வகுப்புக்கு ஒருவர். என ஐந்து பேர்களையும், நடுநிலைப்பள்ளிகள் ஒரு வகுப்புக்கு ஒருவர் என மூன்று பேரையும் பதிவு செய்யலாம். கூடுதலாகப் பதிவு செய்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். கடவுச்சொல்லை மறந்துவிட்ட பள்ளிகள் Forget Password என்ற பட்டனை அழுத்தி அதன் மூலம் தங்கள் கடவுச்சொல்லைப் புதுப்பித்துக்கொள்ளலாம். User ID மறந்துவிட்டால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் மூலமாக இதை மாற்ற இயலாது. தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்கனவே பதிவு செய்த பள்ளிகள் 22-23இல் பதிவுசெய்யும் போது தங்கள் மாவட்டத்தை மாற்றிப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வங்கிக் கணக்கு எண்களைப் பதிவு செய்யும்போது வங்கிக் கணக்கு மாணவரின் பெயரில் தனியான கணக்காக இருக்க வேண்டும். வங்கிக்கணக்கு தொடர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். கணக்கு எண், வங்கியின் பெயர், IFSC Code No முதலியவற்றைப் பிழையின்றிக் குறிப்பிட வேண்டும். இவற்றைப் பதிவு செய்யும்போது. மிகுந்த கவனம் தேவை.
பதிவு செய்ததிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒவ்வொரு வருக்கும் ரூ 10,000/- அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
மின்னஞ்சல், தொலைபேசி எண் முதலியவற்றைக் குறிப்பிடும் போது பள்ளியின் மின்னஞ்சல், பள்ளித் தலைமை ஆசிரியரின் அலைபேசி அல்லது பள்ளியின் தொலைபேசி முதலியவற்றைக் குறிப்பது நல்லது.
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் பற்றிய தகவல் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் என்பதால் அதில் கவனம் தேவை. பள்ளித் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும்போது அலைபேசி எண்கள் மாற்றத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது மிக அவசியம். மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான இணையதளம் 2022, ஜூலை 1-ந் தேதியிலிருந்து 2022 செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே இயங்கும். எனவே பதிவுகளை உடனே செயல்படுத்துமாறு பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டுகிறோம். இந்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளும் தவறாமல் பதிவு செய்ய ஆவன் செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.