பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: நாளை முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 3, 2022

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: நாளை முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும். இந்த வாய்ப்பிலும் விண்ணப்பிக்க இயலாதவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள் மற்றும் தனித் தோ்வா்களுக்கு ஜூலை 25 முதல் ஆக.1 வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஆக.2 முதல் 8 வரையிலும் துணைத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வுக்கு வராத மாணவா்கள், துணைத் தோ்வு எழுத கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளிகளில் விண்ணப்பித்து வருகின்றனா். இந்த அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவுபெறவுள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க இயலாதவா்கள், ஜூலை 5 முதல் 7 வரை, கூடுதல் கட்டணம் செலுத்தி, தத்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து, அதை வைத்து தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். புதிதாக தோ்வு எழுத உள்ள தனித் தோ்வா்களும், அரசு தோ்வுத் துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே, பிளஸ் 1-இல் தோ்ச்சி பெறாத பாடங்களுக்கும், பிளஸ் 2- பாடங்களுக்கும் சோ்த்து விண்ணப்பிக்கலாம். துணைத் தோ்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.