வேளாண் வணிகத்துறையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 18, 2022

வேளாண் வணிகத்துறையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிக்கை

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்குபெற விருப்பமுள்ள தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு உதவி புரிந்திட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஒருங்கிணைப்பாளர்கள், குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், அதற்கான வங்கிக்கடன் பெற்றிட உதவுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்கு PMFME திட்டத்தின் விதிமுறைகளின்படி திட்ட அறிக்கைக்கான கடன் ஒப்புதல் பெறப்பட்டதும் ₹10,000 முதல் தவணையாகவும், வணிக ரீதியான உற்பத்தி துவங்கப்பட்டதும் இரண்டாவது தவணையாக ₹10,000 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பவர்கள், இளநிலை பட்டதாரியாகவும், வேளாண் சார்ந்த நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை tn.pmfme@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான கடைசிநாள் வரும் 24ம் தேதி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.