5-ஆம் வகுப்பு முதல் +1 (பதினொன்றாம்) வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 08.06.2022 மற்றும் 09.06.2022 ஆகிய இரண்டு நாட்கள் எந்திரனியல் பயிற்சி பட்டறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 3, 2022

5-ஆம் வகுப்பு முதல் +1 (பதினொன்றாம்) வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 08.06.2022 மற்றும் 09.06.2022 ஆகிய இரண்டு நாட்கள் எந்திரனியல் பயிற்சி பட்டறை

பத்திக்கைச் செய்தி


எந்திரனியல் பயிற்சி பட்டறை


வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கான "எந்திரனியல் பயிற்சி பட்டறை” 5-ஆம் வகுப்பு முதல் +1 (பதினொன்றாம்) வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 08.06.2022 மற்றும் 09.06.2022 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இவ்விரண்டு நாள் பயிற்சி பட்டறையில் EV-3 ரோபாட்டின் பாகங்களை தொகுத்து வடிவமைத்து செயல்முறை படுத்த விரிவான பயிற்சி அளிக்கப்படும்.


பங்குபெற விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட அறிவியல் மையம், தேசிய நெடுஞ்சாலை, சத்துவாச்சாரி வேலூர் என்ற முகவரியில் நேரில் முன்பதிவு செய்யவேண்டும். சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிப்பட்டறைக்கான


முன்பதிவு முதலில் வரும் 30 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2022. மேலும் தகவலுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.


0416-2253297/2252297

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.