மாணவர்களுக்கு அறிவியல் , கணிதத்தில் கேள்வித்திறனை அதிகரிக்க புதிய திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 28, 2022

மாணவர்களுக்கு அறிவியல் , கணிதத்தில் கேள்வித்திறனை அதிகரிக்க புதிய திட்டம்

6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மத் தியில் அறிவியல் மனப் பான்மையையும் , கணி தம் குறித்த அறிவையும் வளர்க்கவும் , அப்பாடங்களில் கேள்வித்திறனை அதிகரிக்கவும் ஆசிரியர்களுக்கான புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் , அதற்கான படிநிலைகளை பின்பற்ற அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான பல் வேறு முயற்சிகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலும் , கணிதமும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு அறி வியல் மற்றும் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் பின்னாளில் ஒரு குழந்தை என்னவாக போகிறது ? என்பதற்கான அடித்தளத்தை அமைக்க முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மேலும் , அறிவியலையும் கணிதத்தையும் ஒரு குழந்தை சரியான முறையில் புரிந்துகொண்டால் , அதன் கேள்வி கேட்கும் திறன் அதிகமாகும்.

இப்படி குழந்தைகளின் சிந்தனைகளையும் , கேள்விகேட்கும் திறனையும் வளர்த்தெடுக்கும் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு பின்பற்ற வேண்டிய படிநிலைகள் அறிவிப்புடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தெரிந்துக்கொள்ள வழங் கப்பட்டுள்ள படிநிலை களை பின்பற்றி எமிஸ் தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே , இதுதொடர்பான அறிவுறுத்தல்களை விளக்கமாக ஒவ்வொரு பள்ளிக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.