தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி கூறியவைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 1, 2022

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி கூறியவைகள்!

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டிய பிரதமர்:

பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் கலந்துரையாடல்.

ஆண்டுதோறும் பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டினார் பிரதமர்.

பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள் வர இருக்கின்றன.

தேர்வை நாம் ஒரு பண்டிகையாக கொண்டாட தொடங்கினால், அதில் பல வண்ணங்கள் நிறைந்திருக்கும். தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் - பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை.

நம்முடன் படிக்கும் சக மாணவர்களை போல் இருக்க வேண்டும், படிக்க வேண்டும் என ஒருபோதும் நினைவில் இருத்தாதீர்.

நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டால், வெற்றி நிச்சயம் - மாணவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை.

பாடத்தின் மீது முழு கவனம் இருந்தால் ஆன்லைனிலும் சிறப்பாக படிக்கலாம்.

பள்ளியில் அமர்ந்து ஆசிரியரை பார்த்தாலும் முழுகவனம் பாடத்தில் இல்லையென்றால் சரியாக கற்க முடியாது-ஓசூரில் உள்ள பள்ளி ஆசிரியர் சந்திரசூடேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி பதில்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.