"எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி"- ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி-கற்பித்தல் பணியைப் பாதிக்கும் செயல் - களத்தில் இறங்கிப் போராடுவோம்; ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 9, 2022

"எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி"- ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி-கற்பித்தல் பணியைப் பாதிக்கும் செயல் - களத்தில் இறங்கிப் போராடுவோம்; ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

"எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி"- ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி-கற்பித்தல் பணியைப் பாதிக்கும் செயல்-தேசிய கல்விக் கொள்கையின் உட்கூறு- களத்தில் இறங்கிப் போராடுவோம்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

ஊடகச் செய்தி

மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 03/2022 நாள்: 09.02.2022 ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி கற்பித்தல் பணியைப் பாதிக்கும் செயல்! தேசிய கல்விக்கொள்கையின் உட்கூறு!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர்

ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் தொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பயிற்சிகள் வழங்குவதைக் கைவிட்டு ஆசிரியர்களை முழுமையாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமெனவும், பயிற்சி தொடர்பாக ஊடகங்களில் ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் தவறான செய்திகள் வெளியிடப்படுவதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் உடனடியாக உரிய விளக்கம் அளித்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021-22 தொடக்கக்கல்வி மாணவர்களின் கற்றல் கல்வியாண்டில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே இதுவரை வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் நடைபெற்றுள்ளது. அதுவும் இக்காலகட்டத்தில் மாணவர்களை வகுப்பறைச் சுழலுக்குக் ஆம் கொண்டுவரும் ஆயத்தப் பணிகளே பெரும்பாலும் நடைபெற்றுள்ளது. இச்சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து வகைப் பள்ளிகளும் திறக்கப்பட்டுக் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ம் தேதி முடிய 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள்" பயிற்சி நடத்தப்பட்டது. குடிப்பதற்கு "பச்சைத் தண்ணீர் கூட கொடுக்காத பயிற்சி என்று பெயர் பெற்ற அப்பயிற்சி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 09.02.2022 முதல் 09.04.2022 வரை இரண்டு மாத காலம் "எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி" என்ற பெயரில் இணைய வழியில் பயிற்சி அளிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பயிற்சியின் மீது சலிப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1 முதல் 5ம் வகுப்புவரை கல்வி பயிலும் 10 வயதுக்குட்பட்ட சின்னஞ்சிறு மாணவச் செல்வங்களின் கற்றல் இழப்பைப் போக்கும் கடினமான பணியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள தற்போதைய நிலையில், அவர்களது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பயிற்சி மேல் பயிற்சி நடத்துவதை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் கைவிட வேண்டும். தற்போதைய நிலையில் நம் முன் உள்ள மிக முக்கியப் பணி என்பது மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுகட்டுவது மட்டும்தான். அப்பணியைத் தடையின்றி ஆசிரியர்கள் தொடர வழிவகை செய்ய வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள “எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி" இரண்டு காலம் நடைபெறும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் மாத கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள இன்னும் இரண்டு மாத காலம் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்த இரண்டு மாத காலமும் ஆசிரியர்கள் பயிற்சியில் இருப்பது கற்பித்தல் பணியை பாதிக்கும் என்ற உண்மையை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் உணர்ந்திட வேண்டும்.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள “எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி" ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு "அ, ஆ தெரியுமா? கூட்டல் கழித்தல் தெரியுமா? என்பதை சோதிக்கும் பயிற்சி" என ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்பயிற்சியின் நோக்கம், காரணம், பயிற்சிக்கான பாடப்பொருள் ஆகியவை பற்றி மாநில திட்ட இயக்ககம் தெளிவான விளக்கத்தை அளித்திட வேண்டும். ஆரம்பப்பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்கள் தான் எண்ணும் எழுத்தும் தெரியாதவர்கள். அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மெத்தப்படித்தவர்கள், பெரும்பாலும் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும், இப்பயிற்சியில் ஒவ்வொரு பயிற்சிக் கட்டகத்தின் முடிவிலும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கொள்குறிவகை வினா மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும், அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பயிற்சிக்கான செலவினமும் வழங்கப்படும் எனவும் மாநில திட்ட இயக்ககம் அறிவித்திருப்பது ஆசிரியர்களை வேதனையடையச் செய்துள்ளது.

இந்த அறிவிப்பு மாணவர்களின் கற்றல் அடைவை அறிய வகுப்பறைகளில் பல சோதனைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கே சோதனையா? அல்லது வேதனையா? என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்குத் தேர்வு என்ற இந்த அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சி அடையும் வரை தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சிக்கான செலவினம் வழங்கப்படும் என்பதும் தேசிய கல்விக்கொள்கை 2020ன் உட்கூறுகள் என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது.

தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக நுழைக்கும் இதுபோன்ற செயல்கள் தொடங்குமானால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை எதிர்த்து களத்தில் இறங்கிப்போராடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.