அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 10, 2022

அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்

அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

அரசுப் பணியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற விழைவோர் விருப்ப ஓய்வு பற்றிய கீழ்க்காணும் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

நிகர பணிக்காலம் ஒருவர் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்துவிட்டால் விருப்ப ஓய்வு பெறலாம்தான். ஆனால், 20 ஆண்டு பணி என்பது மொத்த பணிக்காலம் அல்ல. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் 01.04.2002 அன்று பணியில் சேர்ந்திருப் பார் எனில், 31.03.2022-ம் தேதியுடன் 20 வருடம் நிறைவு பெறுகிறது. இது (Gross service) மொத்த பணிக்காலம்தான்.

இந்த மொத்த பணிக்காலத்தில் அந்த ஊழியர், மருத்துவச் சான்று சமர்ப்பிக்காமலே எடுத்துக்கொண்ட சம்பளமில்லாத விடுப்பு, தண்டனை என அறிவிக்கப்பட்ட பணிக்காலம், ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டபோது தகுதிக்குமேல் எடுத்துக்கொண்ட பணியேற்பு இடைக்காலம், வரண்முறை (Regulation) செய்யப்படாத பணிக்காலம், பிள்ளைப் பருவபணி (18 வயதுக்குக் கீழ் உள்ளபோது செய்த பணி) ஆகிய அனைத்தும் தகுதியற்ற பணிக்காலம் எனப்படும். மொத்த பணிக் காலத்தில், தகுதியற்ற பணிக்காலத்தை கழித்தது போக நிகர பணிக்காலம் 20 ஆண்டு இருக்க வேண்டும் என்பது விருப்ப ஓய்வுக்கு அவசியம்.

மூன்று மாத நோட்டீஸ் அவசியம்

20 வருட நிகரப்பணியை ஓர் ஊழியர் நிறைவு செய்து முடித்திருந்தாலும், ஒருவர் நினைத்த மாத்திரத்தில் விருப்ப ஓய்வு பெற்றுவிட முடியாது. இதற்கான மூன்று மாத முன்னறிவிப்பு அவசியம். அதாவது, 30.04.2022 பிற்பகல் ஓய்வு பெற விரும்பும் ஊழியரின் விருப்ப ஓய்வு விண்ணப்பம் அதை அனுமதிக்கும் அதிகாரம் பெற்ற நியமன அதிகாரிக்கு (Appointing authority) 01.02.22-க்குள் கிடைத்திருக்க வேண்டும். இதுதான் மூன்று மாத நோட்டீஸ் காலம்.

அனுமதிக்குப் பிறகுதான் அடுத்த நடவடிக்கை

வயது முதிர்வில் (அதாவது, 60 வயது பூர்த்தியான பிறகு) ஓய்வு பெறுவது Superannuation எனப்படுகிறது. இவ்வாறு யாரெல்லாம் அடுத்த ஆறு மாதங்களில் (அல்லது ஒரு வருடத்தில்) 60 வயதை அடையப்போகிறார்களோ, அதைக் கண்காணித்து ஓய்வுக்கால பணப்பலன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு வசதியாக ஒவ்வோர் அலுவலகத்திலும் ஒரு பதிவேடு பராமரிக்கப்படுகிறது.

இதன்படி ஊழியர் ஓய்வு பெறுவதற்கு ஆறுமாதம் முன்பே கூட ஊழியரிடமிருந்து ஓய்வுக்கால பணப்பலன் பெறுவதற் கான விண்ணப்பத்தைப் பெற்று அலுவலகத்தின் பரிந்துரை யுடன் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்பட்டுவிடும். இதன் பயனாக ஊழியர் ஓய்வு பெறும் தேதிக்கு முன்பே அவரது ஓய்வுக்கால பணப்பலன் ஆணைகள் மாநிலக் கணக்காயரிடமிருந்து வந்து காத்துக்கிடக்கும். ஓய்வு பெற்ற மறுநாளே ஓய்வுக்கால பணப்பலன்களை பெற்றுவிடலாம்.

ஆனால், விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு இந்த வசதி கிடையாது. அதாவது, அவர் விருப்ப ஓய்வு கோரும் தேதிக்கு முன்பே ஓய்வுக்கால பணப்பலன் விண்ணப்பம் மாநிலக் கணக்காயாருக்கு அனுப்பப்பட மாட்டாது. அந்த ஊழியர் விருப்ப ஓய்வு கேட்ட தேதிக்குப் பிறகே, அதற்கான ஆணை வரப் பெற்றபின் ஓய்வுக்காலப் பணப்பலன் விண்ணப்பம் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்படும். இதனால் தாமதம் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

இந்த விதிமுறை தெரியாத சிலர் வயது முதிர்வுத் தேதிக்கு இரண்டு, மூன்று மாதத்துக்கு முன்பே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தாலும், இயல்பான தேதிக்குப் பிறகே பணப்பலன் கிடைக்கும். எனவே, ஓய்வுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பவர்கள், அந்த முடிவை எடுப்பதில் சற்று பொறுமை காட்டுவது நல்லது!

அரையாண்டு கணக்கீடுதான்...

ஓய்வூதியப் பலன்களான ஓய்வூதியம், பணிக்கொடை இரண்டுக்கும் பணிக்காலம் (Service period) என்பது அரை யாண்டுகளில் கணக்கிடப் படுகிறது. அதாவது, ஓர் ஊழியர் 25 ஆண்டு பணி முடித்தவர் எனில், அவரது பணிக்காலம் 50 அரையாண்டுகள் என எடுத்துக் கொள்ளப்படும்.

ஒருவர் 22 ஆண்டும் 2 மாதமும் 29 நாளும் பணி நிறைவு செய்திருந் தால், அவரது பணிக்காலம் 22 ஆண்டுகள் என எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, 44 அரையாண்டுகளாகக் கணக்கிடப்படும். ஆனால், 22 ஆண்டும் 3 மாதமும் பணி நிறைவு செய்திருந்தால், இவரது பணி என்பது 45 அரையாண்டு களாகக் கணக்கிடப்படும். அதாவது, 2 மாதம் 29 நாள் வரை யான பணிக்காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. மூன்று மாதம் என்பது ஓர் அரையாண்டாகக் கணக்கிடப் பட்டுவிடும். இதன்படி 8 மாதம் 29 நாள் என்பது ஓர் அரையாண்டு -ஆக கணக்கிடப்படும். 9 மாதம் என்பது இரண்டு அரையாண்டு களாகக் கணக்கில் சேரும்.

விருப்ப ஓய்வு பெறுபவர் மேற்கண்ட கணக்கீட்டைப் புரிந்துகொண்டு, விருப்ப ஓய்வு தேதியைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும். அதாவது, மேற்கண்ட 22 ஆண்டு 2 மாதம் 29 நாள் பணி செய்திருப்பவர் இன்னும் ஒரே ஒரு நாள் தாமதித்து தனது விருப்ப ஓய்வுத்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.