முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோருதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 19, 2025

முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோருதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!



முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோருதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு! Request for approval of advance salary hike - Order of the Principal Secretary of the School Education Department rejecting the request of the Director of School Education!

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 - 10.03.2020-க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோருதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!

பொருள் தமிழ்நாடு அமைச்சுப் பணி பள்ளிக் கல்வி சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 -10.03.2020-க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோருதல் - நிராகரித்து ஆணை வழங்குதல் தொடர்பாக. பார்வை தங்களின் கடித ந.க.எண்.46150/அ4/81/2020. நாள் 24.03.2021 5 20.05.2024.

பார்வையில் காணும் கடிதங்களின் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுவதுடன், அதில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் ஆகியோருக்கு 10.03.2020-க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வு பாகம்-1-ல் தேர்ச்சி பெற்றதற்கான முன் ஊதிய உயர்வு வழங்கக் கோரப்பட்டுள்ளது.

2. மேற்காண் தங்களின் கருத்துருவை பரிசீலித்ததில், அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த(அ.வி.V)த் துறை, நாள் 10.03.2020-ல் அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1-ற்கு வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு இரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசாணை (நிலை) எண்.116. பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த(அ.வி.IV)த் துறை. நாள் 15.10.2020-ல் பத்தி 4(3)-ல் 10.03.2020-க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு 31.03.2021-ற்குள் வழங்கி ஆணை வெளியிடப்படவேண்டும் отоот காலக்கெடு நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டது.

இக்காலக்கெடுவானது, 31.03.2021 அன்றுடன் முடிவடைந்த நிலையிலும் மற்றும் இது அரசின் கொள்கை முடிவு என்பதாலும், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பணியாளர்களுக்கு தற்போது முன் ஊதிய உயர்வு வழங்கக் கோரும் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.