முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - "5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு"* - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 22, 2025

முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - "5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு"*



முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - "5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு"*

இரும்புகாலம் “தமிழ் நிலபரப்பில் இருந்துதான் இரும்புகாலம் தொடங்கியது” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது நிரூபணம் என பெருமிதம்

"அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!

5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம்.

இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை.

உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம்.

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது"

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை "தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன.

பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவுவெளிப்படுத்தியது.

தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின்வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன்.

தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல, அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள்!

உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது"

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை



இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், இந்திய துணை கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், 'இரும்பின் தொன்மை' என்ற நுாலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

அத்துடன், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு, அடிக்கல் நாட்டுகிறார். கீழடி இணையதளத்தை துவக்கி வைக்க

உள்ளார். இவ்விபரத்தை, அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவை, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 'நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள். மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

முதல்வர் அகழாய்வு தொடர்பாக, ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது வேறு துறை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரா என, 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.

இன்று அண்ணாமலை அறிவிப்பு

மதுரை மேலுார், வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன், டில்லி சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தார்.

அதன்பிறகு பேட்டி அளித்த அண்ணாமலை, 'டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்' என்றார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், 'இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்' என அறிவித்திருப்பது, தமிழக மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இன்று முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது - முதல்வர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் தகவல்!

இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அழைப்பிதழை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் வீட்டில் இருந்தே நேரலையில் காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அதில், இந்திய வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் அறிவிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.