மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 16, 2024

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்!



மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்!

கல்வி 2024-25 1 கல்வி முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்- சார்ந்து 1) பள்ளிக் கல்வித்துறை- ஒருங்கிணைந்த பள்ளிக் மாநில திட்ட இயக்குநர், .

பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்

ந.க.எண்.2183/ஆ8/ கலைத் திருவிழா/ ஒபக/2024, நாள் : 09.08.2024

2) மாநில திட்ட இயக்குநரின் கடித எண் 2183/ஆ8/ கலைத்திருவிழா/ஒபக/2024 நாள் 22.08.2024.

3) மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.2183/ஆ8/ கலைத்திருவிழா/ஒபக/2024, நாள்: 27.08.2024.

4)மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.2183/ ஆ8/கலைத்திருவிழா/ஒபக/2024, நாள்: 30.09.2024.

5) மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.2183/ ஆ8/ கலைத்திருவிழா/ஒபக/2024, நாள்: 14.10.2024.

6)மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.2183/ ஆ8/கலைத்திருவிழா/ஒபக/2024, நாள்: 28.10.2024.

7) மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.2183/ ஆ8/ கலைத்திருவிழா/ஒபக/2024, நாள்: 05.11.2024.

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, 2024-2025 ஆம் ஆண்டில், 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, பள்ளி, குறுவள, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களைக் கொண்டு மாநில அளவிலான போட்டிகள் கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறவுள்ளது.

மாவட்ட அளவில், ஒவ்வொரு பிரிவிலும் நடைபெற்ற போட்டிகளில், ஒவ்வொரு போட்டியிலும் முதலிடத்தில் வெற்றிப் பெற்ற மாணவர்களை (அதாவது ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்த ஒருவர் அல்லது ஒரு குழு மட்டுமே) மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ள அந்தந்த மாவட்டத்தில் பங்குபெறச் செய்தல் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும்.

மாநில அளவிலான போட்டிகள்:

* மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ள நான்கு மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் போட்டிகளை திட்டமிட்டு நடத்திட வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டவாறு ஒவ்வொரு பிரிவுக்குமான மாநில அளவிலான போட்டிகளை திட்டமிட்டு நடத்துவது போட்டிகள் நடைபெறவுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (CEO) பொறுப்பாகும்.

போட்டிகளில் பங்கேற்பதற்காக மாணவர்கள் எவரும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. * மாநில அளவிலான போட்டிகளை நடத்தும் 4 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், போட்டிகள் நடைபெறும் இடத்தினை உடனடியாக தேர்வு செய்து அதன் முழு விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் முன்கூட்டியே தெரிவித்தல் வேண்டும்.

அவ்வாறு பெறப்பட்ட தகவல்களை அந்தந்த மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சார்ந்த தலைமையாசிரியர் வாயிலாக முன்கூட்டியே தெரிவித்து அனைத்து போட்டிகளிலும் அனைத்து மாணவர்களும் தவறாமல் பங்குபெறுதலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

* மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச்சென்று மீண்டும் கொண்டுவந்து சேர்த்தல் குறித்த திட்டமிடுதலை முதன்மைக் கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.

மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் (Consent Letter from Parent) கட்டாயமாக பெறப்படுதல் வேண்டும். அவ்வாறாக பெறப்படும் ஒப்புதல் கடிதங்களை முறையாக பராமரித்தல், சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்பாகும். அதன் நகலினை பெற்று மாவட்டத் திட்ட அலுவலகத்தில் முறையாக பராமரித்தல் மாவட்ட உதவி திட்ட அலுவலரின் பொறுப்பாகும்.

* மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும்போது மாணவர்களுடன் ஆண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் செல்வதை முதன்மைக் கல்வி அலுவலர் உறுதி செய்தல் வேண்டும். * குழுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அதே மாணவர்கள் மட்டுமே அடுத்தடுத்த நிலைகளில் பங்கேற்ற வேண்டும். மாநில அளவில் பங்கேற்கும் போது குழுவில் இடம் பெற்றுள்ள மாணவர் எவரேனும் தவிர்க்க இயலாத காரணங்களால் பங்கேற்க இயலவில்லையெனில் அவர்களுக்கு பதிலாக வேறு எந்த ஒரு மாணவரையும் கட்டாயமாக சேர்த்தல் கூடாது.

பொதுவான * பள்ளி அளவில் வெற்றிப் பெற்று அடுத்தடுத்த நிலைகளில் பங்கேற்று தெரிவுப்பெற்றவர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர் ஆவர். எனவே, மாநில அளவில் பங்கேற்கவுள்ளவர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க மாவட்ட அளவிலான குழு ஒன்றினை ஏற்படுத்தி உறுதி செய்தல் வேண்டும். குழுவினர் சரிபார்த்து சான்றளித்த பின்னரே வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைத்தல் வேண்டும். இதற்கான Bonafide Ceritificate சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படுதல் வேண்டும்.

பார்வை-1ல் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகளுக்கான விதிமுறைகள் மற்றும் ஒவ்வொரு போட்டிக்குமான மதிப்பீட்டு முறையினை பின்பற்றி போட்டியாளர்களின் கலைத்திறன் சார்ந்த வெளிப்பாட்டினை (Performance) ஒவ்வொரு போட்டிக்கான நடுவர்களும் மதிப்பிடுதல் வேண்டும்.

ஒவ்வொரு போட்டிக்குமான நடுவர்களை முன்கூட்டியே தேர்வு செய்து, போட்டிகள் நடைபெறும் நாட்களை அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து, ஒவ்வொரு போட்டிக்கும் உரிய நடுவர்கள் குறித்த நேரத்தில், சரியான போட்டியில் கலந்துக்கொள்வதை போட்டிகளை நடத்தும் நான்கு மாவட்டங்களில் அமைக்கப்படும் அமைப்புக்குழு உறுதி செய்தல் வேண்டும். * ஒவ்வொரு போட்டிக்கும் உரிய மதிப்பெண் தாள்களை அந்தந்த போட்டிகளுக்குரிய நடுவர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.

நடுவர் குழுவில் இடம் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள்/ தலைமையாசிரியர்கள் / வல்லுநர்கள் தாங்கள் நடுவர்களாக பங்குபெறும் போட்டிகளில் தங்கள் பள்ளிகளின் மாணவர்கள் அல்லது நடுவர்களின் குழந்தைகளோ பங்கேற்பின், சார்ந்த போட்டிகளில் அவர்கள் நடுவர்களாக நியமிக்கப்படுவதை தவிர்த்தல் வேண்டும். இவ்வாறாக, ஒவ்வொரு போட்டிக்குமான முதல் மூன்று வெற்றியாளர்களை/குழுக்களை போட்டிக்கான நடுவர் குழு அமைத்து தேர்ந்தெடுத்தல் வேண்டும். நடுவர்களின் மதிப்பீட்டு படிவத்தில் அடித்தல், திருத்தல், வெள்ளை மை வைத்து அடித்தல் ஆகியன முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அதன் எதிரே சார்ந்த நடுவரின் முழு கையொப்பம் கட்டாயமாக இடப்படுதல் வேண்டும். * அரசுப் பள்ளி மாணவர்களுள், ஒவ்வொரு போட்டியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று வெற்றியாளருக்கான படைப்பின் புகைப்படம் & காணொலியின் Google Drive Link-ஐ EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும்.

* அதேபோன்று, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுள், ஒவ்வொரு போட்டியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று வெற்றியாளருக்கான படைப்பின் புகைப்படம் மற்றும் காணொலியின் Google Drive Link-ஐ EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும்.

மாநில அளவிலான அமைப்புக் குழு உறுப்பினர்கள்: (5 Members) மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை நடத்துவதற்கான அமைப்புக் குழுக்களை தனித்தனியே அதாவது அரசுப் பள்ளிகளுக்கு ஒரு அமைப்புக் குழுவினையும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு ஒரு அமைப்புக் குழுவினையும் போட்டிகள் நடைபெறவிருக்கும் நான்கு மாவட்டங்களிலும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அமைத்தல் வேண்டும்.

* மாவட்டக் கல்வி அலுவலர் – 1 நபர்

* உதவித் திட்ட அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (PA to HSS) - 1 நபர்

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் / பேராசிரியர்கள் - 2 நபர்கள் * முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (PA to HS ) / பள்ளித் துணை ஆய்வாளர் - 1 நபர்

மாநில அமைப்புக் குழுவானது, போட்டிகள் நடத்துவதற்கான இடத்தினை தேர்வு செய்தல், போட்டிக்கான நடுவர் குழுவினை தேர்வு செய்தல், நடுவர்களின் மதிப்பெண் தாள்கள் முறையாகப் பராமரித்தல், போட்டியின் இறுதியில் வெற்றியாளர்களை அறிவித்தல் முறையாக போட்டிகளை நடத்துவதற்கான செலவினங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுதல் போன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பு வகித்தல் வேண்டும்.

மற்றும் மேலும், ஒவ்வொரு போட்டிக்குமான முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படும் Consolidated Mark Sheet படிவத்தில் மாநில போட்டிகளுக்கான அமைப்புக்குழுவினரின் கையொப்பம் கட்டாயமாக இடம் பெற்றிருத்தல் வேண்டும். அதன் பின்னரே ஒவ்வொரு போட்டிக்கான வெற்றியாளர்களை அறிவித்தல் வேண்டும்.

ஒவ்வொரு போட்டிக்குமான வெற்றியாளர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS தளத்தில் போட்டி நடைபெறும் மாவட்டத்தின் APO Login வாயிலாக 03.12.2024-ற்குள் உள்ளீடு செய்யப்படுதல் வேண்டும். இதனையும் அந்தந்த மாவட்டத்திலுள்ள மாநில அமைப்புக் குழு உறுதி செய்தல் வேண்டும்.

மாநில அளவிலான போட்டிகளுக்கான வெற்றியாளர்களின் தகவல்கள் EMIS தளத்தில் குறித்த நேரத்திற்குள்ளாக உள்ளீடு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வது மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் நான்கு மாவட்ட உதவித் திட்ட அலுவலர்களின் (APO) பொறுப்பாகும். அனைத்து போட்டிகளும் அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்தப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு போட்டிக்கும் அந்தந்த போட்டிக்கான நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. மாநில அளவில் போட்டிகள் நடத்துவதற்கான நிதி :

* மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.1,96,800/- நிதி ஒதுக்கீடு செய்து நிதி விடுவிக்கப்படும். இந்நிதியில் மாணவர்களுக்கான போக்குவரத்து செலவினங்களை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

* மாநில அளவிலான போட்டிகளை நடத்திடும் நான்கு மாவட்டங்களுக்கு போட்டிகளை நடத்துவதற்கான செலவினங்களான மேடை அமைப்பு, ஒலி- ஒளி அமைப்பு, பேனர், தண்ணீர், தேனீர், உணவு, தங்குமிட செலவினம், நடுவர்கள் மதிப்பூதியம் மற்றும் இதர செலவினங்களை மேற்கொள்ள பின்வருமாறு நிதி விடுவிக்கப்படும்.

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி சார்ந்த அனைத்து வரவு செலவு கணக்குகளும் அதாவது மாவட்டங்களுக்கு போக்குவரத்து செலவினங்களுக்காக விடுவிக்கப்படும் நிதி மற்றும் போட்டிகள் நடைபெறும் நான்கு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படும் நிதி ஆகியன தனித்தனியாகப் பராமரிக்கப்பட்டு, முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு. தணிக்கை அறிக்கையினை பயன்பாட்டு சான்றுடன் (Utilisation Certificate) சார்ந்த மாவட்ட திட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்படுதல் வேண்டும். CLICK HERE TO DOWNLOAD SPD - State Level Kalaithiruvizha PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.