ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரித்து வருத்தத்தை அளிக்கிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 7, 2024

ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரித்து வருத்தத்தை அளிக்கிறது

ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரித்து வருத்தத்தை அளிக்கிறது

இரண்டாம் பருவம் 7 ஆம் தேதி தொடங்க இருக்கும் நேரத்தில் ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரித்து வருத்தத்தை அளிக்கிறது.* *1-3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு பாடத்திற்கு 10 பதிவுகள்.*

*மூன்று பாடத்திற்கு மொத்தம் 30 பதிவுகள்.*

*4-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு பாடத்திற்கு 12 பதிவுகள்.*

*ஐந்து பாடத்திற்கு மொத்தம் 60 பதிவுகள்.* *இரண்டாம் பருவம் தொடங்கிய உடன் கற்பித்தலை* *விட்டுவிட்டு இந்த*

*பணியைத்தான் செய்யவேண்டுமா.?*

*அல்லது*

*EMIS பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளவர் செய்ய வேண்டுமா ?*

*அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் இது மூன்றுநாட்களில் நடக்குமானால்*

*அங்கே கற்பித்தல் பணியை யார் செய்வது ?*

*இதனால் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டு மாணவர்கள் நலன் பாதிக்கப்படும்*

*எனவே இந்த பணியை கைவிடுமாறோ அல்லது EMIS பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளவர் செய்ய வழிவகை* *செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.*
*நினைவூட்டல் -*

*தமிழக அரசு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலன்கருதி தேவையற்ற நிர்வாக பணிச்சுமையை குறைக்கும் வகையிலும் தங்களது பணிநேரத்தை மாணவர்களின் கற்றல் / கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் 2021-22 கல்வித்துறை மான்ய கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.